Tuesday, October 23, 2012

en ninaivukalin e -pathivukal Murugan song


தென்பழனி வேல் முருகா ஓடி வரவா—உந்தன்
தேன் தமிழை நாவில் வைத்து பாடி வரவா
ஆவினன் குடியை நான் நாடி வரவா—முருகா
அருணகிரி திருப் புகழைப் பாடி வரவா 

கால்நடை பக்தருடன் கூடி வரவா-ஐயா
காவடியை தோளில் வைத்து ஆடி வரவா
குன்னக்குடி குன்றில் உனை காண வரவா- அங்கே
அன்னக் கொடி கண்களுக்கு தோண வரவா
குலத்தினில் குறத்தியை சேர்த்த முருகா-ஒரு
பழத்திற்காக ஆண்டியான பால முருகா
கோடி நலம் நீதருவாய் ஓடி வரவா—முருகா
கொஞ்சும் தமிழ் விஞ்சி வர பாடி வரவா
ஆறுபடை வீட்டில் உன்னை பார்க்க வரவா-முருகா
அடியார்கள் பாடுவதைக் கேட்க வரவா
ஆடியில் முந்தி வெள்ளி வரவா-ஐயா
அறியாமல் செய்தவற்றை கிள்ளி வரவா  (தென்)

No comments:

Post a Comment