Wednesday, January 2, 2013

en ninaivukalin e-pathivu ----Thagavalgal



என்னால் எதுவும் முடியாது---கோழைத்தனம்
என்னால் எல்லாமே முடியும்—அகங்காரமான முட்டாள் தனம்
எது என்னால் முடியுமோ அதனை முடிக்க என்னால் முடியும் கடவுள் கருணை இருந்தால்-------வாழ்க்கைப் பாதை
இதயத்தை பேண்:
விலை மதிப்புள்ள பீரோவில் தேவையற்ற துணிகளையோ, பொருள்களையோ வைக்கிறோமா? இல்லையே.....அப்படி இருக்கும் போது
விலைமதிப்பில்லாத இதயத்தில் வேண்டாத நினைவுகளையும், ஒழுக்கம் கெட்ட சிலரையும்  ஏன் வைக்க வேண்டும்.?



1. அருகாமையில் இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்குவதை விடுத்து சற்று

தொலைவாக சென்றாலும் Wholesale கடைகளில் சென்று சகாய விலையில் பொருட்களை

வாங்குங்கள்.


2. கடைக்கு போவதற்கு முன் என்ன வேண்டும் என்று பட்டியலிட்டு வாங்குங்கள்.


3. அவற்றை மட்டும் வாங்குங்கள். Super Market சென்று கண்ணில்

பட்டதையெல்லாம் வாங்கி வரவேண்டாம்.


4. தெரிந்த Brand மட்டும் வாங்குங்கள். புதிய முயற்சிகள் வேண்டாம்.


5. Toiletries அனைத்தும் இந்திய Brand வாங்குவதால் நிறைய


மிச்சப்படுத்தலாம்.



“வாக்கிங்” போற பார்ட்டியா நீங்க ?" உடற்பயிற்சி
என்றாலே பெரும்பாலானவர்கள் சொல்லும் அறிவுரை “நடப்பது”
தான். தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து
உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு
குறையத் துவங்கும் என்றெல்லாம் மக்கள் பயன்களை அடுக்குவதுண்டு.


அறிவுரையைக் கேட்பவர்கள் கேட்க மறந்து போகும்
விஷயங்களில் சில எப்படி நடக்கவேண்டும், எத்தனை வேகமாக நடக்க வேண்டும்
போன்றவை.


உலகெங்கும் பலருக்கும் இருக்கக் கூடிய இந்தக்
குழப்பத்தை அமெரிக்க
விஞ்ஞானிகள் இப்போது ஒரு ஆராய்ச்சி மூலம் தீர்த்து வைத்திருக்கிறார்கள்.


அதாவது நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள்
எடுத்து வைத்து நடப்பதே
அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள்
நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் அவர்கள்.


எதிர்பார்க்கும் பயன் கிடைக்க வேண்டுமெனில்
ஆண்களின் நடை வேக விகிதம்
நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும் எனவும் ,
பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும் எனவும் அவர்களுடைய ஆய்வு
முடிவு தெரிவிக்கிறது.


97 பேரை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சி இறுதி
முடிவாக, ஆண்களோ, பெண்களோ
நிமிடத்துக்கு சுமார் நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பது நல்லது எனும்
முடிவை எட்டியிருக்கிறது.


இந்த ஆராய்ச்சி ஆரோக்கியமான மக்களை வைத்து
எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆரோக்கியம் குறைவானவர்களோ, மிக அதிக எடை கொண்டவர்களோ அதற்கு ஏற்றார்போல்
நடையின் வேகத்தை மிதப்படுத்தலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி தொடர்பான
பேராசிரியர் கேரி டோனோவன்.


தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது. அதுவும்
நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.


எனவே, அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே
வந்து நடங்கள்.


கவனம் தேவை, நிமிடத்துக்கு நூறு அடிகள் !







நமது கணினியில் பயன்படுத்தும் சாதாரண அப்ளிகேசன்களின் எண்ணிக்கையையும், ‘சைசையும்’ குறைக்கவேண்டும். உதாரணமாக திரைப்படங்கள் பார்க்க நீங்கள் ‘விண்டோஸ் மீடியா பிளேயர்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக VLC  மீடியா பிளேயர் பயன்படுத்திப்பாருங்கள்.

ஏனினில் விண்டோஸ் மீடியா பிளேயரானது அதிக அளவு ரேம் பகுதியை பயன்படுத்தும். இதனால் கணினியின் வேகம் குறையும்.

அதேபோல நீங்கள் டாகுமென்ட்களை படிப்பதற்காக ‘மைக்ரோசாப்ட் ஆபீஸ்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக ‘ஓபன் சோர்ஸ்’ அப்ளிகேசன்கள் சிலவற்றை பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் கணினியானது வேகம்பெரும்.

இதற்கான ஓபன் சோர்ஸ் அப்ளிகேசன்கள் சில,
ஃபாக்ஸ் இட் ரீடர்,
அபிவோர்ட்,
ஓபன் ஆபீஸ்,
ஆட்டோமேட்டிக் அப்டேட்ஸ்:

நமது கணினி அவ்வப்போது அதை அப்டேட் செய்யவா? இதை அப்டேட் செய்யவா? என கேட்டுக்கொண்டே இருக்கும். நாமும் அதை ‘நாளை’தள்ளிவைத்து விடுவோம். இது பெரிய வேலைகூட இல்லை. நாம் இப்படிச்செய்வதால் கணினியின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் இதன் வேகமும் குறையும்.

எனவே my computer -> properties -> Automatic updates என்றவரிசையில் தேர்வுசெய்து உடனுக்குடன் உங்கள் கணினியை அப்டேட் செய்யுங்கள். அல்லது அப்டேட் செக்கர் என்ற அப்ளிகேஷனை உங்கள் கணினியில் நிறுவினால் அதுவே அப்டேட் செய்துகொள்ளும்.

கண்டிப்பாக இந்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றினால் உங்களது கணினியானது வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். வித்யாசத்தை நீங்களே உணருங்கள் நண்பர்களே!





நமது கணினியில் பயன்படுத்தும் சாதாரண அப்ளிகேசன்களின் எண்ணிக்கையையும், ‘சைசையும்’ குறைக்கவேண்டும். உதாரணமாக திரைப்படங்கள் பார்க்க நீங்கள் ‘விண்டோஸ் மீடியா பிளேயர்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக VLC  மீடியா பிளேயர் பயன்படுத்திப்பாருங்கள்.

ஏனினில் விண்டோஸ் மீடியா பிளேயரானது அதிக அளவு ரேம் பகுதியை பயன்படுத்தும். இதனால் கணினியின் வேகம் குறையும்.

அதேபோல நீங்கள் டாகுமென்ட்களை படிப்பதற்காக ‘மைக்ரோசாப்ட் ஆபீஸ்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக ‘ஓபன் சோர்ஸ்’ அப்ளிகேசன்கள் சிலவற்றை பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் கணினியானது வேகம்பெரும்.

இதற்கான ஓபன் சோர்ஸ் அப்ளிகேசன்கள் சில,
ஃபாக்ஸ் இட் ரீடர்,
அபிவோர்ட்,
ஓபன் ஆபீஸ்,
ஆட்டோமேட்டிக் அப்டேட்ஸ்:

நமது கணினி அவ்வப்போது அதை அப்டேட் செய்யவா? இதை அப்டேட் செய்யவா? என கேட்டுக்கொண்டே இருக்கும். நாமும் அதை ‘நாளை’தள்ளிவைத்து விடுவோம். இது பெரிய வேலைகூட இல்லை. நாம் இப்படிச்செய்வதால் கணினியின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் இதன் வேகமும் குறையும்.

எனவே my computer -> properties -> Automatic updates என்றவரிசையில் தேர்வுசெய்து உடனுக்குடன் உங்கள் கணினியை அப்டேட் செய்யுங்கள். அல்லது அப்டேட் செக்கர் என்ற அப்ளிகேஷனை உங்கள் கணினியில் நிறுவினால் அதுவே அப்டேட் செய்துகொள்ளும்.

கண்டிப்பாக இந்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றினால் உங்களது கணினியானது வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். வித்யாசத்தை நீங்களே உணருங்கள் நண்பர்களே!



இராமாயணம் ஒரு தன்னம்பிக்கை பூங்கா எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காதே. என்பது ராமாயணத்தின் ஒரு கோணம்.
பொது வாழ்வில் பதவி போனால் மரியாதை இல்லை தனி வாழ்வில் மனைவி போனால் மானமே இல்லை தன் உறுதியால் இரண்டையும் தன் காலில் விழ வைத்த தன்னம்பிக்கை தலைவன் ராமன்.

enninaivugalin e-pathivu en manathai urukkiya kavithai



தாய் மண் வாசம் தேடும் என் சுவாசம்
திரும்ப நான் போவேனா
என் ஆயுள்ரேகை
அழிந்து சாவேனா
இன்னொரு முறை என் சொந்த மண்ணை
மீண்டும் பார்ப்பேனா
மறுபடியும் நான அங்கு செல்கிற போதும்
முன் போல் சிரிப்பேனா
என்னை விட்டுப் பிரிந்த உறவுகள் எல்லாம்
நினைவில் சுடுகிறது
நெருப்பில் விழுந்த புல்லாங்குழலாய்
நெஞ்சம் எரிகிறது
கூர் நகம் கொண்ட எமன் எங்கள்
கூட்டை குதறியது
நினைவைத் தவிர வேறென்ன மிச்சம்
கனவும் கசக்கிறது
கண்ணெதிரில் உயிர் பிரிந்தவர் முகங்கள்
கனவில் அழுகிறது
கதறிய அவர்களின் கடைசிக் கூக்குரல்
காற்றில் அலைகிறது




நிம்மதி சூழ்க
ஜென்ம்ம் நிறைத்த்து
சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க...
ஜன்னமும் பூமியில்
புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை
இரண்டு மில்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணை தான்
ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய
கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?
நேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்ட தென்றது
சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்த்து
காற்றுடன் போக
மண்ணில் பிறந்த்து மண்ணூடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை
ம்றதியைப் போல் ஒரு
மாமருந்தில்லை
கடல் தொடும் ஆறுகள்
கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள்
அழுவதுமில்லை
நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர்
மயங்குவதென்ன..
மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாத்தை
மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில்
செடி வந்து சேரும்
பூமிக்கு நாமொரு
யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது
நியதி என்றாலும்
யாத்திரை என்பது
தொடர்கதை ஆகும்
தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திடக் கூடும்.
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க
தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க
போனவர் புண்ணியம்

எம்முடன் சேர்க....




விரிவதெல்லாம் வானமில்லை
கற்பிப்பதெல்லாம் கல்வியுமில்லை !நதி கடலாக முடியாதுகடலில் கலக்கலாம் ! உயிர்கள் இறைவனாக முடியாது
அவனோடு கலக்கலாம் !என்னால் நான் கொண்ட துயரத்தை
நின்னாலன்றித் தீர்க்க
என்னால் ஆகுமோ ?சூரியனுக்கு இருளைத் தெரியாது
அறிவுக்கு அறியாமையைத் தெரியாது
உன் மனத்தால் ஏற்பட்ட தளைகளை விட
வேறெந்த தளைகளால்
உன்னைக் கட்ட முடியும் ?தூக்கம் என்னவென்று தெரியாது
ஏன் தூங்க வேண்டும் ?விழிப்பு என்னெவென்று தெரியாது
ஏன் விழித்திருக்க வேண்டும் ?பிறப்பு என்னவென்று தெரியாது
ஏன் இறக்க வேண்டும் ?இருக்கும்இடத்தை விட்டு
அங்கு இங்கு நகராமல்
காலத்தின் பின்னே செல்ல வேண்டுமா ?இசையைக்கேள் !மனிதன் விடுதலை பெற வேண்டியது
தன்னிடமிருந்துதான் !எடுத்தது பிறப்பில்லை
காத்திருக்கும் இறப்பு !உன் விளக்கத்தை உன் விளக்கமே
உனக்கு உணர்த்துகிறது ! பாதையானாய் பயணமானாய்
புறப்பட்ட இடமானாய்
அடைகின்ற ஊரானாய் ! 
MARS -
க்கு போகிறாயா ? போ !எந்த உலகம் போனாலும்
உன்னைத் தொடர்வது மரணம் மட்டுமே !தலைக்கு மேலே விமானம்
காலின் கீழே மயானம் !அறிந்ததெல்லாம்
அறியாமையின் முயற்சி
அறியாததெல்லாம் அறிவிக்கு விளக்கம் !கல்வி மனிதனிடம் இல்லை
எங்கும் பரந்து கிடக்கிறது !நன்றி ;இசைஞானி இளையராஜா 
(
முல்லைச் சரம்-மே 2008)



இழந்து விட்டதன் மீதுதான்
ஆசை அதிகரிக்கிறது
எப்போதும்
நேற்று அப்பா
இன்று நீ. 2) அழுது விடுங்கள்
அவமதித்தர்களை
துரோகமிழைத்தவர்களை
ரணப்படுத்தியவர்களை
பிறகு எப்போதும் போல
உங்கள் குழந்தை மனதுடன்
உலா வாருங்கள்.


முதல் தேதியைச் சொல்லிச் சொல்லி
முப்பது நாளையும் தள்ளாதே
உழைப்பைக் கொஞ்சம் அதிகரித்தால்
முப்பது நாளும் முதல் தேதி !







en ninaivukalin e-pathivu ----New year message--2013

happy new year to all.


நாளையப் பற்றி முன் எச்சரிக்கையுடன் இருப்பது தவறில்லை. ஆனால் நாளைப் பற்றிய நினைப்பில் இன்றைய பொழுதை வீணாக்க கூடாது.

இன்றைய தினம் பற்றிய கவலை மனிதனை கீழே தள்ளி
விடுவதில்லை.நாளைய தின கவலையே மனிதனை ஆழத்தில் ஆழ்த்தி விடுகிறது.

இன்றைய பொறுப்புகளைத்தாங்கிக் கொள்ள நமக்குப் போதுமான வல்லமை இருக்கிறது. நாளைய பற்றிய நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.ஏனெனில் அது இன்னும் நம்முடையதாகவில்லை. சரி தானே!

அதுபோல் நேற்றைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதிலும் பயன் இல்லை

“சிந்திய பாலைப் பற்றி சிந்திப்பதால் என்ன பயன்?”
பேசிய வார்த்தை,விடப்பட்ட அம்பு, பயன் படுத்திய வார்த்தை, இம் மூன்றும் திரும்பி வராது...

சென்றதினி மீளாது மூடரே-நீர்
சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையென்னும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதியதாய் பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்...
என்ற பாரதியாரின் கூற்றும் உண்மையே;

எனவே—

கழிந்து போன நாளைப் பற்றி கவலைப் படுவதை விட, இன்னும் வராத ஒரு நாளைப் பற்றி எண்ணி பரிதவிப்பதைவிட இன்றைய தினத்தில் என்னசெய்வது என்கின்ற தெளிவுடனும் உறுதியுடனும் செயல் பட்டால் அதுவே பல பிரட்சனைகளைத் தீர்த்து விடக் கூடியதாக இருக்கும்.

கடந்த கால சிந்தனை கைகொடுக்க போவதில்லை.எப்படி இருக்கும் என தெரியாத நாளைப் பற்றி கவலைப் படுவதில் அர்த்தமில்லை.

.எனவே...

நேற்றைய கதவுகளை அழுத்தமாக சாத்தி தாளிட்டு விட்டு,நாளைய ஏக்கத்தில் நேரத்தை வீணாக்காமல் ,இன்று செய்யவேண்டியவேலைகளைமுறைப்படுத்திகவனமுடனும்,திறமையுடனும்,செய்வோம்.

மேலும்,

இன்றைய தின வேலைகளை என்னால் நிறைவேற்ற முடியும் என்ற
நம்பிக்கையுடன் தினமும் படுக்கையைவிட்டு எழுந்திருப்போம். அந்த நம்பிக்கையே பொறுப்புகளை வெற்றிகரமாக சமாளிக்கும் பலசாலியாக நம்மை மாற்றும்.

நேற்றைய வேலைகளை இன்றைக்கு செய்வதும்,நாளைய வேலையையும் இன்றே செய்வதும், நமக்கு வேலைப் பளுவை அதிகமாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நாம் செய்ய வேண்டியது;

ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்குரிய பரிபூரண வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வது.

நேற்று என்பது பாரமாக வேண்டாம். நாளை என்பது பயமுறுத்த வேண்டாம்.இன்று நிம்மதியாக வாழக் கற்றுக் கொள்வோம்.
வாழ்க வளமுடன்