Saturday, February 2, 2013

enninaivugalin-e-pathivu--story (sundar share the story)

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".




ஒரு செல்வந்தர் இருந்தார்.
ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில்
விளைந்த
வாழைக்குலை ஒன்றை பணியாளிடம்
கொடுத்துக் கோவிலில் கொடுக்கச்
சொன்னார்.
ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும்
வழியில் அவனுக்கு அதிகப்
பசியெடுக்கவே அக்குலை யிலிருந்த
பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..
மீதிப் பழங்களை கோவிலில்
கொடுத்தான்.
அன்றிரவு செல்வந்தர்
ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன்
வந்து நீஎனக்குக் கொடுத்த
இரண்டு பழங்களை நான்
சாப்பிட்டேன்;ருசியாக
இருந்தது என்றான்.
செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.
ஒரு குலை பழம் கொடுத்திருக்க
இரண்டு மட்டுமே இறைவனுக்குப்
போய்ச் சேர்ந்திருக்கிறது.
மீதி என்னவாயிற்று எனக் கோபப்
பட்டான்.
மறு நாள் காலை அந்தப் பணியாளைக்
கூப்பிட்டு விசாரித்தான்.
அவன் இரண்டு பழங்களைப்
பசியினால் தான்
சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக்
குலையைக் கோவிலில்
கொடுத்து விட்டதைச் சொன்னான்.
செல்வந்தனுக்குப் புரிந்தது .
அந்த ஏழை சாப்பிட்ட பழம்
மட்டுமே இறைவனைச்
சென்று அடைந்திருக்கிறது என்று!


Friday, February 1, 2013

enninaivugalin e- pathivu animation




en ninaivugalin e-pathivu--check the drug is original or not

IF YOU WANT TO KNOW THAT THE DRUG WHICH YOU BROUGHT FROM THE STORE ARE ORIGINAL OR DUPLICATE IS JUST BY EASY 3 STEPS ..... BY DR.TRILOK RAVAL

BEHIND THE EACH MEDICINE THERE IS ONE NINE DIGIT NUMBER WHICH IS THE UNIQUE ID NUMBER .........

JUST MSG THAT NUMBER TO 9901099010

AFTER 10 SEC. YOU WILL GET ONE RESPONSE MSG ........

IF THE MEDICINE IS ORIGINAL THEN YOU WILL GET THE REPLY WITH THE PROPER BATCH NUMBER AND THE NAME OF THE PHARMA COMPANY .....

WHICH YOU CAN CROSS CHECK WITH YOUR STRIPS OR ANY MEDICINE WHICH YOU BROUGHT ......

AND IF THE NUMBER IS NOT MATCHING THEN YOU JUST HAVE TO RESEND THE SAME MSG SO THE COMPLAINT WILL BE REGISTERED ........

Tuesday, January 29, 2013

en ninaivukalin e-pathivu---joke with picture












25thdaypost1.JPG

en ninaivukalin e-pathivu -vairamuthu-kavithai (amma)

ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே௦.

எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ ?
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ??

பொன்னையா தேவன் பெற்ற, பொன்னே குலமகளே,
என்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு !!!!

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கத்தி எடுப்பவனோ? களவாட பிறந்தவனோ ?
தரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ ?
இந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,
நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .

கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
தொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா………

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,
சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.
கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,
அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,

தித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,
கத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,
கோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊரும்…..

வறுமையில நாமப்பட்ட வலி தாங்க மாட்டான் அவன்,

பேனா எடுத்தேன், பிரபஞ்சம், பிச்சு ஏறிஞ்சேன்,

பாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,
காசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே…..

கல்யாணம் நா செஞ்சு, கதியற்று நிக்கையில,
பெத்த அப்பன், சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,
அஞ்சாறு வருஷம், உன் ஆசை முகம் பாக்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே…..

படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்
கை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே
பாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,

வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,
கை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….
எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????

en ninaivukalin e-pathivu ----story

என் வீட்டிற்கு புதிதாய்த் திருமணம் செய்த அவர்களை விருந்திற்கு அழைத்திருந்தோம். அந்த மணமகனை நட்பு என்ற வகையில் தான் பழக்கம்.
   அந்த இளம் ஜோடியுடன் அந்த மணமகனின் தாயும் வந்திருந்தார். அவர்களுடன் என் கணவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அடுப்பறையில் வேலையாக இருந்தேன்.

    அப்பொழுது அந்த பெண் வந்தாள். வந்தவள் “உங்களிடம் ஒன்று கெட்கவேண்டும்“ என்றாள் சற்றுத் தயங்கி.

    புதியதாக நம் வீட்டிற்கு வருகிறாள் இல்லையா...? மிகவும் தயக்கமாகப் பேசியதால்... “என்னம்மா வேண்டும்? பயப்படாமல் கேள்“ என்றேன்.

    அவளும் உடனே “நீங்கள் உங்கள் கணவரை எப்படி கூப்பிடுவீர்கள்...?“ என்று கெட்டாள்.

    இது என்னடா.. புது மாதிரியான கேள்வியாக இருக்கிறதே என்று நான் சற்றுத் தயங்கி...  “ஏனம்மா...? என்ன விசயம்?“ என்றேன்.

    அவளும், “உங்களுக்கே தெரியும தானே... நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவள். என் அம்மா அப்பாவைப் பெயர் விட்டு தான் கூப்பிடுவார். நானும் அவரை அப்படித்தான் அவரின் பெயர் சொல்லிக் கூப்பிட்டேன். ஆனால் என் மாமியார் அதைத் தப்பு என்றும் இந்த மாதிரி என் பிள்ளையை பெயர் சொல்லிக் கூப்பிடாதே... என்றும் கோபமாகத் திட்டினார்கள். பிறகு அவரை எப்படி அவங்க எதிரில் கூப்பிடுவது என்று தெரியாமல் அவர் எதிரில் எதுவுமே பேசாமல் கையசைத்துப் பேசுகிறேன்...“ என்றாள்.

   எனக்கு சிரிப்பாக வந்தது. நான் சிரித்தைக்கண்டு அவள் கோபமுற்று... “சரிக்காதீங்க ஆண்டி. எப்படி கூப்பிடனும்ன்னு சொல்லுங்க“ என்றாள் உரிமையாக.

    நான் என்னவென்று சொல்வது... நாம “மூடு“க்குத் தகுந்தவாறு ஏதேதோ சொல்லிக் கூப்பிடுவோம். அதைப்போய் இவளிடம் எப்படி சொல்வதென்று யோசிக்கும் பொழுதே... “ஆண்டி... அங்கிள் ஹாலில் இருக்கிறார். இப்போ நீங்கள் அவரை எப்படி கூப்பிடுவீர்கள்?“ என்று கேட்டாள்.

   அப்பாடா... நல்ல வழி கிடைத்த்து என்று நானும் உடனே.. (நம் முன்னோர்கள் சொன்னபடி) “ஏங்க.... இங்க கொஞ்சம் வாங்க...“ என்று கூப்பிடுவேன் என்றேன். அவளும் சரியென்று தலையாட்டினாள்.

    அதன் பிறகு நான் அவரிடம்... “ஏங்க... இதைக் கொண்டு போங்கள்... ஏங்க.... இதைச் செய்யுங்கள் ...“ என்று நிறைய “ஏங்க போட்டதும் அவளும் புரிந்து கொண்டிருப்பாள் என்று தான் நினைத்தேன்...


    இது நடந்து இரண்டு நாள் கழித்து அவளின் மாமியாரிடமிருந்து ஒரு போன் வந்தது. “ஏம்மா அருணா.... நீ தான் என் மருமகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தியா...?“ என்றார்கள்.

    நான் தமிழ் கற்றுக் கொடுத்தேனா....? என்ன இது வம்பாப் போச்சேன்னு நினைத்து “ஏன் மாமி... என்ன ஆச்சி?“ என்றேன்.

    அவர்களும் “நடந்ததைக் கேள் அருணா“ என்றார்கள் சிரித்த படி.


   அதாவது... அந்த பெண்ணின் கணவன் வேலை முடித்து வரும் போது இரெயிலைத் தவற விட்டுவிட்டான். அதனால் தன் மனைவிக்குப் போன் செய்து “நான் டிரெயினைத் தவற விட்டுவிட்டேன். அடுத்த டிரெயின் ரொம்ப லேட்டாகக் கிளம்பும். அதனால் நான் வர லேட்டாகும். அம்மாவிடம் சொல்லி அவங்களை எனக்காக காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டு படுக்கச் சொல்“ என்று சொல்லி இருக்கிறான்.

    அந்தப் பெண்ணும் தன் மாமியாரிடம் வந்து “ஏங்க டிரெயினை தவறவிட்டாராம். அதனால் ஏங்க வர லேட்டாகுமாம். நீங்கள் ஏங்கக்காக காத்திருக்க வேண்டாமாம். உங்களைச் சாப்பிட்டு ஏங்க  தூங்கச் சொல்ல சொன்னார்“ என்று சொல்லியிருக்கிறாள்.

   அவர்களுக்கு முதலில் ஒன்றும் விளங்காமல் திரும்பவும் கேட்டதற்கு திரும்பவும் அவள் நிறைய “ஏங்க“ போட்டு பதில் சொல்லியிருக்கிறாள். அவர்களுக்குப் புரிந்தவுடன் இந்த நகைச்சுவையை “நீயும் கேட்டு சிரி“ என்று எனக்குப் போன் செய்து சொன்னார்கள்.

   பிறகு நானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தேன்.


ஆமாம்... நண்பர்களே... “ஏங்க“ என்றால் உண்மையில் என்ன அர்த்தம்...? தெரிந்தவர்கள் எழுதுங்களேன். நானும் தெரிந்துக் கொள்கிறேன்.