Thursday, January 20, 2022

Enninaivugalin e pathivu

 தினம் ஒரு தகவல்----ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? 

இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு. 

உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே? என்றான் .

அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம் .மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே? ஒரு குறையும் இல்லை என்றார் குரு அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழம். மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.

குரு கேட்டார் கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா? வலிக்காது குருவே என்றான் .மேலும் சிறிது நீரை ஊற்றினால்.?.. குரு கேட்டார். அதுவும் வலிக்காது குருவே என்றான். 

குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்? 

என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். உன் கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. என்றார் குரு.

Thursday, December 30, 2021

Enninaivugalin e pathivu

 #படிங்க_ரொம்ப_பிடிக்கும் 


அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார். எரிச்சலும் கொள்வார். ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்.


ஒருநாள் அவரது கணவர், "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" என்று அந்த பெண்ணிடம் கூறினார். அவரும் அமைதியாக சம்மதித்தார்.


மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான். அதற்கு அந்த பெண்ணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும். முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக.


மகள் ஓடி வந்து, "அம்மா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு. அதற்கு தாய், "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்.


குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர்.


ஒருநாள் அந்த பெண்மணியே எல்லோரையும் அழைத்து அமர வைத்து பின்வருமாறு கூறினார்:


"சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது. அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு. என்னுடைய கோபம், என்னுடைய பதற்றம், என்னுடைய பயம், என்னுடைய மன அழுத்தம், என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை. அவை என் ஆரோக்கியத்தை கெடுத்து என் பிரச்சினைகளை தான் அதிகரிக்கும். 


என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே உங்களுக்கு என்னால் கொடுக்க முடியும். உங்களுக்கு தேவைப்பட்டால் என் அறிவுரைகளை நான் தருவேன். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்வேன். ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.  


ஏனெனில் என்னை சார்ந்து நீங்கள் இந்த பிறவியை எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை. உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு கூறல் வேண்டும். உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் சந்தோசத்தை நீங்களே தேடுமளவுக்கு நீங்களும் எல்லா அறிவையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே தான் நான் அமைதியாகி விட்டேன்."


குடும்பமே வாயடைத்துப்

போனது...


அவர்களின்

செயல்பாடுகளுக்கு

அவர்களே பொறுப்பு

என்று அனைவரும்

உணர்ந்து விட்டால்

வாழ்க்கை

அமைதிப் பூங்காவாக

மாறும்

Wednesday, December 22, 2021

Enninaivugalin e pathivu

 ஆமை சொல்லும் இரகசியம் !

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள்

உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில்

போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த

தொழில் நுட்பம்!

தன் நுண்ணறிவால்

நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள்

நிறைய.

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்

நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ

வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்

சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்

போக்குவரத்தை நீரின்

ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.

இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்

தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்

கடல்படையும் போகமுடியாத பல

இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!

மத்திய

தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல

வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.

பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்

பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை

அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்

மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில்

ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.

உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,

கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்

மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.

கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.

சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்

இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்

பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்

அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.

போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்

உண்மை!

கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்

தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ்

கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட

வழித்தடமும் ஒன்றுதான்!

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க

இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும்

ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம்

தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.

விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம்

உண்டு. தான் பிறந்த

இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.

தமிழ்கத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. இதில்

பல ரகசியங்கள் இருக்கும் போல! - Krish Ram

Enninaivugalin e pathivu

 உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....!!


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோர செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்களே....!


அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது. இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.


பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனை பேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கே அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.


தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.


ஹிட்லர் மன்னிப்பு கோரல்

---------------------------------------

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.


‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.


முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடைய ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார். puradsifmcom 


இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை” என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.


யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.


இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிட்டு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

Enninaivugalin e pathivu

 நேற்று ராத்திரி மணி எப்படியும் இரண்டு இருக்கும்...திடீர்னு ஒரு ம்யூசிக் கேட்டது..சட்டுனு தூக்கம் கலைஞ்சி போச்சி....நல்லா செம குளிர் வேற இங்க..இழுத்து போர்வை தலைலேந்து கால் வரைக்கும் போர்த்தி  படுத்துருந்தேன் திரும்ப அதே ம்யூஸிக்..அட இது நமக்கு பழக்கப்பட்ட  சவுண்ட்  ஆச்சேனு  உத்து கேட்கவும் கண்டுபிடிச்சிட்டேன் இது Candy Crush Gameசவுண்ட் ஆச்சே..அய்யோ இந்த பாதி ராத்திரில யாரு விளையாடுறா?இவரா நு யோசிக்கும்போதே ஒரு பெரிய கொறட்டை சவுண்ட் இவர்க்கிட்டருந்து அது நான் இல்லைனு எனக்கு கன்பார்ம் பண்ணினமாதிரி.....கூடவே மறுபடியும் ஏதோ கேண்டி நொறுங்கி இருக்கும் போல ஸ்வீட் அப்படினு ஒரு சவுண்ட்...இப்ப கொழப்பமே இல்ல கன்பார்ம்மா அது ஏதோ ஒன்னு தான்...பேய் பிசாசுங்களுக்கெல்லாம் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மேல எப்பவும் ஒரு ஈர்ப்பு உண்டு..ஈஸியா அவைகளை அதால் ஊடுருவ முடியும்...பேய் அங்க  இருக்குனா அந்த இடங்களில் லைட்லாம் சரியாக எரியாது...பிளிங் ஆயிட்டே இருக்கும்.....எப்பவோ ஹண்டிங் ல பார்த்த ஒரு ஸீன் நியாபகம் வேற வந்து தொலைந்தது நேரம் பார்த்து...கண்ண இருக்கி மூடிக்கிட்டேன்...


கொஞ்ச நேரம் அந்த சவுண்ட் கேட்கலை...சரி தைரியமா இவர எழுப்பலாம்னு நினைக்கும் போதே திரும்ப நிறைய்ய கேண்டிய க்ரஸ் பண்ணின சவுண்ட்..இப்ப டேஸ்ட்டினு சத்தம்...செத்தேன்..கடவுளே எப்டியாவது  அதுக்கு இருக்கிற அஞ்சி லைஃப்பும் தீர்ந்து போகனும்....அது சீக்கிரம் தோத்துப்போய் இந்த இடத்த காலி பண்ணினா போதும்னு கந்தசஷ்டி கவசம் சொல்லுவோம்னு மனசுக்குள்ளயே சொன்னா பதினைஞ்சி லைனுக்கு மேல சரியாவே வர மாட்டேங்குது அதனால என்ன திரும்ப மொதல்லேந்தே சொல்லுவோம்னு ..மறுபடியும் டிகுகுண டிகுகுண டிகுகுண லயே நிக்குது...இந்த கன்ப்யூஸ்ல அந்த சத்ததை நோட் பண்ண விட்டுட்டேன்....


என்ன பண்ணிவச்சிருக்குனு தெரில ஒருவேளை அந்த 171வது லெவல்லயே ரொம்ப நாளா ஜெயிக்காம இருக்கோம்னு நமக்காக வெளையாடி கொடுக்குதோனு  ஒரு சின்ன கரிசனம் அது மேல வந்தாலும்....நோ பேய் சகவாசம் கூடாதுனு..இப்ப வேற ஸ்லோகம் ஏதாவது சொல்லலாம்னு நினைக்கும்போதே இவர் திரும்பி படுக்கிற சவுண்ட்...இதான் சமயம் டக்குனு எழுந்துப்போம்னு நினைக்கும்போதே கேண்டி சவுண்ட்....இது கேம்ம கேன்சல் பண்ணின சவுண்ட்.....அப்பாடா வெளையாடி முடிச்சி தொலைஞ்சது..இனி போய்டும்...இப்ப நாம் எழுந்துக்க வேணாம் நம்மள அது பாதி ராத்திரில பார்த்து டென்ஷன் ஆயிடும்... இப்படியே  கொஞ்சநேரம் மூச்சு விடாம படுத்துப்போம்னு அப்டியே நானும் கொர்ர்ர்ர்ர்ர்ர்.....


காலைல....ஏண்டி உனக்கு  எத்தனை தடவை சொல்லிருக்கேன் நைட்டு தூங்கும்போது கேம் விளையாடாதனு.நீ விளையாடீட்டு அப்டியே தூ்ங்கிட்ட...நைட்டு உன் மொபைல் மேல நான் படுத்திருக்கேன் போல...ஒரே  கேம் சத்தம்...எடுத்து ஆஃப் பண்ணிட்டு படுத்தேன்...இனிமேல் மொபைல்ல படுக்கும்போது கேம் விளையாடின அவ்ளவுதான்னு சொல்லிட்டு போறாரு....


அப்டீனா அந்த டிகுகுண டிகுகுண சஷ்டி கவசத்தை பாதி ராத்திரில உங்களுக்குதான் டெடிகேட் பண்ணினேனா நானு அவர பார்த்து கேட்கவும் ..நீ யாருனு நினைச்சனு கேட்கவும்...நான் பேய்னு சொல்லவும்..இந்த வீட்டுல ஒரு பேய்க்குதான் அலவ்டுனு சொல்லிட்டு  வாஷ் ரூம்க்கு ஓடிட்டார்....


சே இவர் கொறட்டை விடும்போதெல்லாம் இவர் தொப்பைக்கு இடுக்குல என் மொபைல் மாட்டி அந்த வைப்ரேஷன் ல கேம் அப்ப அப்ப ஆன் ஆயிருக்கு...இது தெரியாம நான் பேய் மேல வேற வீண் பழி சுமத்திட்டேன்...

Monday, December 20, 2021

Enninaivugalin e pathivu

 வாழ்க்கை என்பது ஒரு வழிப் பாதை...திரும்பி போகமுடியாது..திரும்பி பார்க்கத்தான் முடியும்..எனவே மனம் போகும் போக்கில் என் நினைவுகள்........விரும்புவதே விருப்பமானவர்களுக்காக செய்வதை விட  எனக்கு மிகவும் பிடித்த பல விஷயங்களை விரும்பியவர்களுக்காக செய்யாமல் கழித்த நாள்களே அதிகம்..அந்த மன ஆரோக்கியம் அப்ப மிகுதியாக என்னிடம் இருந்தது...காலத்தின் கட்டாயத்தால் இப்ப குறைந்து விட்டதோ என்ற மனக் கலக்கம் அடிக்கடி எனக்கு தோன்று கிறது.