Thursday, February 16, 2012

en ninaivugalin e-pathivu -february--computer keys use

F1 - Used to open the help of Internet Explorer.
F3 - Open the search window with in explorer.
F4 - View the previously opened websites.
F5 - Refresh the webpage.
F6 - Used to select the address bar.
F10 - Used to select the main menu bar.
F11 - View webpage in Full Screen View (on/off).
Print Screen - Used to capture the full screen.
Esc - Used to stop any downloading page.

Shortcut keys with the Combination of Ctrl key

Key Purpose

Ctrl+A - Used to select the full page of active screen.
Ctrl+B - Used to open "Organize Favorites" windows to organize the list of favorites.
Ctrl+F - Used to find any word or phrase in a page.
Ctrl+H - Used to open the history of previously opened websites
Ctrl+I - Used to open the list of favorites.
Ctrl+E - Open the search window with in explorer.
Ctrl+P - Used to send the print of active webpage.
Ctrl+O - Used to move to new location (type new website name, document or folder to open in internet explorer).
Ctrl+W - Used to close the active windows.
Ctrl+N - Used to open the active webpage in new window.
Ctrl+F4 - Used to close the active windows.
Ctrl+R - Perform same task like F5 (Refresh the active webpage).
Ctrl+Page Up - Used to move active page up.
Ctrl+Page Down - Used to move active page down.
Ctrl+Mouse Wheel - Used to change the font size of active page.
Ctrl+Enter Press Ctrl+Enter - Windows will automatically add both "www" and ".com".

Shortcut keys with the Combination of ALT key

Key Purpose

ALT+A - Used to open the list of your favorite.
ALT+D - Go to address bar.
ALT+H - Used to open internet explorer Help menu.
ALT+E - Used to open internet explorer Edit menu.
ALT+F - Used to open internet explorer File menu.
ALT+T - Used to open internet explorer Tools menu.
ALT+V - Used to open internet explorer View menu.
ALT+F4 - Close the active internet explorer.
ALT+Home - Move to your home page.
ALT+LEFT - Used to move to Back page.
ALT+RIGHT - Used to move to Forward page.

en ninaivugalin e-pathivu animation-february


Tuesday, February 14, 2012

en ninaivugalin e-pathivu photos-february




en ninaivugalin e-pathivu -story


ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன.
அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.

தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.

ஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குதுஎன்று புலம்பிக்கொண்டிருந்தது.

அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள். 

தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. என்னய்யா அநியாயம் இது..நான்பாட்டுக்கு சிவனேன்னு தானே மரத்துல இருந்தேன்..இப்படி ஆத்தோட அடிச்சுக்கிட்டுப் போறனே..அய்யய்யோஎன்று அழுதது.

அண்ணன் கிளை தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்லஎன்றது.

தம்பி கிளை கடுப்பாகி விட்டது. ச்சீ..நீயெல்லாம் ஒரு கிளையா? இங்க உசுரே போகுதுங்கிறேன். ஜில்லுன்னு இருக்குன்னு லொள்ளு பண்றே..அய்யய்யோ..தூக்கித் தூக்கிப் போடுதேஎன்றது.

அண்ணன் கிளையோ தம்பி, இதை மனிதர்கள் கண்காட்சியில் காசு கொடுத்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைச்சிருக்கு. சொய்ங்..சொய்ங்னு போறது சூப்பரா இருக்கில்ல?” என்றது.

இனியும் இவன்கூட பேசக்கூடாதுஎன்று முடிவு செய்த தம்பி கிளை, ஆண்டவனில் ஆரம்பித்து அனைத்தையும் திட்டித் தீர்த்தது. எவ்வளவு சொகுசா மரத்துல இருந்தேன், இப்படி பாறையிலயும் கரையிலயும் முட்டி மோதும்படி ஆயிடுச்சே என்று புலம்பித் தள்ளியது. அண்ணன் ஆற்று நீரோட்டத்தில் விளையாடியபடியே போய்க்கொண்டிருந்தது.

கடைசியில் இரு கிளைகளும் கடலை நெருங்கின. தம்பி கிளை பதறியது. அண்ணே, நம்ம கதை முடிஞ்சுச்சு. இந்த நல்லதண்ணில கரை ஒதுங்குனாக் கூட வேர் பிடிச்சு வளர வாய்ப்பிருக்கு. அங்கே கடலுக்குள்ள போனா கன்ஃபார்மா சாவு தான்என்றது.

ஆமாம் தம்பி. அது எனக்குத் தெரியுமேஎன்றது அண்ணன் கிளை.

தெரியுமா? அது தெரிஞ்சா சந்தோசமா வந்தே?”

ஆமா, எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்காங்க தம்பி. அதனால் எப்படியும் நம்ம கதை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிஞ்சு போச்சு. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாத்து வெள்ளம். அப்போ நமக்கிருந்தது ரெண்டே சாய்ஸ் தான். ஒன்னு அதை அமைதியா ஏத்துகிட்டு ,அந்த கஷ்டத்தையே எஞ்சாய் பண்றது. இன்னொன்னு அதை எதிர்த்துக்கிட்டு டென்சன் ஆகி சாவுறது.நான் முதல் சாய்ஸை எடுத்தேன். நீ இரண்டாவதை எடுத்தே..ரெண்டு பேருக்கும் ஒரே முடிவு. ஆனாலும் நான் சந்தோசமா சாவை நோக்கி வந்தேன். நீ அழுதுக்கிட்டே வந்தே. இங்க முடிவும், ஆரம்பமும் நம்ம கையில் இல்லை. இடைப்பட்ட பயணம்..அதுல நல்ல சாய்ஸ்-ஐ நாம தான் எடுத்துக்கணும்

தம்பி நீ சொல்றது சரி தான்ணே..நான் வேஸ்ட் ஆக்கிட்டேன்ன்னு சொல்லும்போதே கடல் வந்துவிட்டது. இருகிளைகளும் கடலில் சங்கமித்தன.

தையே காப்மேயர் மழை பெய்யட்டும்என்றார். எங்கோ அவசரமாகக் கிளம்புகிறீர்கள். மழை பிடித்துக்கொண்டது. இப்போது உங்களுக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான். ஒன்று, ’என்னய்யா மழை இது’  என்று டென்சன் ஆவது. இரண்டாவது மழை பெய்யட்டும் என அமைதியாக மழையை ரசிப்பது. நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்?

en ninaivugalin e-pathivu mother's spl









Sunday, February 12, 2012

en ninaivugalin e-pathivu -நல்லவங்க சொன்னத நானும் சொல்கிறேன்

பணிவாக இரு ! நீ கர்வப்படும்படி உன்னிடம் என்ன இருக்கிறது?

வணங்க ஆரம்பிக்கும்போதே வளர ஆரம்பித்து விடுகிறோம்.

வீழ்வது வெட்கமானதல்ல ! வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கப்படவேண்டிய விஷயம் 

அடைபட்டிருக்கும் கதவுகளின் அருகில் நின்று அழுது புலம்பிக்கொண்டு திறக்கப்பட்டிருக்கும் ஜன்னல்களை கவனியாமல் இருந்து விடாதே.

அடுத்தவனுடைய மெழுகுவர்த்தியை அணைக்கும் முயற்சியில் உன்னுடைய விரல்களை சுட்டுக்கொள்ளாதே!

எதுவுமே நேராததுபோல் நடந்து கொள்ளுங்கள் ; என்னதான் நடந்திருந்தாலும் சரி !
சண்டையில் முதலில் வாயை மூடுகிறவன் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் ? ! !

    எல்லா உண்மையையும் நீங்கள் பேசவேண்டுமென்ற கட்டாயம் எதுவும் கிடையாது. நீங்கள் பேசுவதெல்லாம் உண்மையாக இருக்கட்டும் !

முட்டாள்களோடு விவாதம் வேண்டாமே. பார்கிறவர்களுக்கு யார் முட்டாள் என்ற  சந்தேகம் வந்து விடும்.  

உங்களை யாராவது விமரிசனம் செய்தால் உங்களுக்கு கோபம் வருகிறதா ?

அப்படியானால் அந்த விமரிசனம் மிக சரியானதுதான்.!.


அதிர்ஷ்டம் கெட்ட காலத்தில் கைத்தடியும் பாம்பாகும்.

அடிமை போல் உழைக்கணும். அரசன் போல்
உட்கார்ந்து சாப்பிடணும்


அதிகம் யோசிப்பவன் சொற்பமாகத்தான்
செய்து முடிப்பான்.

அறுபதடி கம்பத்தில் ஏறி வித்தை காட்டினாலும்,
தரைக்கு வந்துதான் தட்டு ஏந்தியாகணும்.

அடுப்பு புகையுமிடத்தில் பிச்சைக்காரனுக்கும்
ஒரு பங்கு இருக்கத்தான் செய்கிறது 


அரண்மனை வாசற்படி அதிகம் வழுக்கும்.
அழகாபுரி கொள்ளையானாலும் அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு ஆழாக்கு பால்
கிடைத்தாலும் அதையும் பூனை குடிக்குமாம்

அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியாது.

அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் ஒரு
பாரமா?


அற்பப்புத்திகாரன் கைகளில் அதிகாரம்
வந்தால் அண்டை வீட்டுக்கார்களுக்கு
இரைச்சல்தான் மிச்சம்.

* அரைக்காசுக்கு தோணியும் வேண்டும் ;
அது ஆற்றை கிழிச்சிகிட்டு பாயவும்
வேண்டும் !


அன்ன நடை நடக்கபோய் காகம் தன்
சொந்த நடையை இழந்ததாம்.


அணில் தள்ளி தென்னை சாயுமா ?


அன்பற்ற மாமிக்கு கும்பிடும் ஒரு குற்றமே !

அமாவாசை இருட்டில் பெருச்சாளி
போனதெல்லாம் வழிதான் !

* அறுக்கதெரியாதவன் இடுப்பில்
ஐம்பத்தெட்டு அரிவாள் !

அறுவடை காலத்தில் எலிக்கும் அஞ்சு
பெஞ்சாதி.

* அறப்படித்தவன் அங்காடி போனால்
விற்கவும் மாட்டான்; வாங்கவும்

அங்காடிகாரியை சங்கீதம் பாட
சொன்னால் வெங்காயம், கறிவேப்பிலை
என்பாள்.

சீலை இல்லைஎன்று சின்னாயி வீட்டுக்குப் போனால், அவள் ஈச்சம் பாயை கட்டிக் கொண்டு எதிரே வந்து நின்னாளாம்!

கப்பல் ஏறிவிட்ட கடனை கொட்டை நூற்றா அடைக்க முடியும் ?

அன்னப்பாலுக்கு சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்கு சர்க்கரை கேட்கலாமா ?

அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன்.

அழிந்த கொல்லையிலே கழுதை மேய்ந்தால் என்ன ? குதிரை மேய்ந்தால் என்ன?

அற்பன் கை ஆயிரம் பொன்னிலும், சத்புத்திரன் கைத் தவிடு மேல் !

அவசரத்தில், அண்டாவுக்குள் கூட கை நுழையாது.

அரசன், கல்லின் மேலே கத்திரிக்காய் காய்க்கும் என்று சொன்னால், கெத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்

அம்மண தேசத்தில், கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

ஆவுடையாரையும், ஆத்தாளையும் ஆற்று வெள்ளம் அடிச்சிட்டு போகும்போது சுத்தியுள்ள லிங்கமெல்லாம் சோத்துக்கு அழலாமா?

ஸ்ரீரங்கத்து காக்கையானால் கோவிந்தம் பாடுமா?

சிரட்டை தண்ணீரும் எறும்புக்கு சமுத்திரமே..

கெட்டிக்கார சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விட முடியாது !

சிட்டு குருவிக்கு பட்டம் கட்டினால் சட்டி பானை மேலே லொடலொடன்னு தத்துவத்தை தவிர வேறு என்ன செய்யும்?.

இறகு முற்றி, குஞ்சுகள் பெரிதானால், அதது தன்னுடைய வயிற்றைத்தான் பார்க்குமே தவிர தாய்ப்பறவையை பற்றி கவலைப் படுவதில்லை.

கழுகு எவ்வளவுதான் உயரப் பறந்தாலும் அதன் கண்களும் நோக்கமும் குப்பை மேட்டிலுள்ள செத்த எலியின் மீதுதான் இருக்கும்.

மயிலின் அழகு இயற்கையாக ஆண்டவனால் கொடுக்கப்பட்டது. அப்படியிருக்க கழுத்தை நீட்டிக்கொண்டு உடலை வளைத்துக்கொண்டு அந்த கர்வ நடை எதற்காக ? தான் எதையோ பெரிதாக சாதித்துவிட்டதைப்போல !!

தான் கூவுவதைக் கேட்பதற்காகத்தான் சூரியன் உதிக்கிறான் என்று சேவல் நினைக்குமானால், அதற்கு பெயர்தான் அகந்தை.!!

குயில் பாட்டில் இனிமையைக்காட்டிலும் சோகம்தானே அதிகம் இருக்கிறது. சோகத்தை ரசிக்க யாரால் முடியும், இதயமில்லாதவர்களைத் தவிர ?!

பணக்காரனாக வேண்டுமா ? அதற்கு செல்வத்தை குவிக்க வேண்டிய அவசியமில்லை ! தேவைகளைக் குறைத்துக்கொண்டாலே போதும்.

முட்டாள் மேலும் மேலும் பணத்தை தேடிக்கொண்டிருப்பான். அறிவாளி, இருக்கும் கொஞ்ச பணத்தையும் அனுபவித்துக்கொண்டிருப்பான்.


பானையில் சோறிருக்கும்வரை, கூரையில் காக்கை கூட்டத்திற்கு குறைவில்லை. கையில் பணமிருக்கும் வரை, உறவு கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.

பணம் என்ற பாஸ்போர்ட் உங்கள் கையில் இருக்குமானால் சொர்க்கத்துக்குகூட வெகு சுலபமாக சென்று விடலாம்.

கண்ணில் பட்ட பொருளை எல்லாம் வாங்கும் பழக்கமானது, முடிவில் தேவையான பொருளைக்கூட விற்கும் நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும்.

பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது. பணமில்லாவிட்டால் உன்னை யாருக்குமே தெரியாது.

பிறக்கும்போது மூடிய கைகளோடு பிறக்கிறோம். இறக்கும்போது திறந்த கைகளோடு போகப்போகிறோம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நமக்கு கிடைப்பது எல்லாமே லாபந்தான்.



ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே, அவனை உயர்த்தி பேச மனிதர் கூட்டம் என்றும் தப்பாதே ! என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை, ஒரு மனிதனாக உலகம் என்றும் மதிக்க மாட்டாதே.


























       

en ninaivugalin e-pathivu --sri ragaventhira


கி.பி.19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சி, முன்பு மானியமாக வழங்கப்பட்ட நிலங்களை எல்லாம் மீண்டும் அரசுடைமை ஆக்கிக் கொள்ளும் பொருட்டு Re –sumption of Indian Lands Regulation  என்ற சட்டத்தைப் பிறப்பித்து Permanent settlement செய்த போது ஸ்ரீ ராகவேந்திர்ரின் பிருந்தாவனம் அமைந்துள்ள மாஞ்சாலம் எனப்ப்டும் மந்த்ராலய கிராமத்தை அரசுடைமை ஆக்குவதற்கான உத்தரவையும் பிறப்பித்த்து.

ஆனால் இந்த உத்தரவிற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து இக்கிராமம் நவாப் சித்தி மசூத்கான் என்பவரால் திவான் செங்கண்ணரின் மூலம் ஸ்ரீ ராகவேந்திர்ருக்கு தானமாக அளிக்கப் பட்ட்து என்று விண்ணப்பம் செய்த வண்ணம் இருந்தனர்.

ஆங்கிலேய அரசாங்கம் ஒரு Settlement Officer ஐ மந்திராலயம் அனுப்பி உண்மை நிலைமையை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட்து.

அதன்படி தாமஸ் மன்றோ என்ற அதிகாரி மந்திராலயம் செல்ல ஏற்பாடாகியது.(இவரது உருவச் சிலை இன்றும் அண்ணாச் சாலையில் உள்ளது)

உள்ளே செல்லும் மின் தனது காலணிகளையும் தலையில் இருந்த தொப்பியையும் அசற்றி விட்டு பிருந்தாவனத்தை நெருங்கினார்.அவரைச் சுற்றி அதிகாரிகளும் பக்தர்களும் நின்றிருந்தனர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் தமஸ்மன்றோ அவர்கள் மட்டும் இடைவெளி விட்டுப் பேசிக்கொண்டிருந்தார். அங்கு கூடியிருந்தோருக்கு அவர் பேசுவதை கோர்வையாக புரிந்து கொள்ள முடியவில்லை,ஆனால் அவர் எதிரே யாருடனோ பேசுகிறார் என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்தனர்.

தன் உரையாடலை முடித்துக் கொண்ட மன்றோ பிருந்தாவனத்தை வலம் வந்து சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

பிருந்தாவனத்து பூஜகர்கள் மந்த்ர அஷ்சதையை கொடுக்க முற்பட்ட போது அவர் தன் கையை விரித்துக் காட்டி சொன்னார் தனக்கு குரு ஸ்ரீ ராகவேந்திர்ர் பரிசுத்தமான பரிமள மந்த்ர அஷ்சதையை வழக்கி விட்டார் .

மேலும் மன்றோ சொன்னார்சுவாமிகள் பிரத்யசமானார். அவர் பிரஹலாத அவதாரம் எடுத்த போதே இந்த இடம் அவர் வசத்தில் இருப்பதாகவும், தற்போது நவாப் அவர்களிடம் ஒரு சம்பிரதாயமே தவிர வேறொன்றும் இல்லை என்றும் கூறினார்.இன்னும் நான் கேட்ட சந்தேகங்களுக்கெல்லாம் ஆங்கிலத்திலேயே விளக்கம் தந்தார்.

இவற்றுக்கெல்லாம் அதிகாரபூர்வமான ஆதாரம் மதராஸ் அரசாங்க கெஜட்டில் பக்கம் 213ல்ஆதோனி தாலுகாஎனும் தலைப்பின் கீழ் 51வது அத்தியாயத்தில் விளக்கமாக கூறப்படுகிறது.