Monday, December 18, 2017

Enninaivugalin epathivu...ninaithu parkiren

காலம் முன்னாே க்கி என்னை எழுத்துச்சென்றாலும் பாழும் மனது பின்  நாே க்கி யேசெல்கிறது...மனதின் பாே க்கில் எனது மலரும் நினைவுகள்...              பத்து வயதுக்கு முன் ...............                       நான் குழந்தை யாக  இருந்த பாே து எனக்கு மூத்தவன் இறந்து விட்டான்.. எல்லாே ரும் வருத்தத்தில் இருந்தனராம்.நான் மிகவும் அழுதே னாம்.என்னை கடையில்வேலைசெய்யும்பை யன் சமாதானம்செ ய் கிறே ன் என்று கீழே பாே ட்டு விட்டான்.பேச்சு மூச்சின்றி இருந்தே னாம்...என் அப்பா வருத்தத்தில் இவளை யும் அடக்கம் பண்ண ஏற்பாடுசெய்யுங்கள்.என்றார்களாம்..பின் நினைவு திரும்பி  இன்று  அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்வது .....உம்.....


வாழ்க்கை என்பது ஒரு வழிப் பாதை...திரும்பி போகமுடியாது..திரும்பி பார்க்கத்தான் முடியும்..எனவே மனம் போகும் போக்கில் என் நினைவுகள்........விரும்புவதே விருப்பமானவர்களுக்காக செய்வதை விட எனக்கு மிகவும் பிடித்த பல விஷயங்களை விரும்பியவர்களுக்காக செய்யாமல் கழித்த நாள்களே அதிகம்..அந்த மன ஆரோக்கியம் அப்ப மிகுதியாக என்னிடம் இருந்தது...காலத்தின் கட்டாயத்தால் இப்ப குறைந்து விட்டதோ என்ற மனக் கலக்கம் அடிக்கடி எனக்கு தோன்று கிறது.


மனதின் பாே க்கில்..............அந்த நாட்களில் இரவில் ராப்பாடி என ஒருவன் பாடிக் கொண்டு வருவான்.கையில் வட்ட வடிவில் ஒரு கருவி இருக்கும் விரலில் கட்டையை கட்டி தொங்க விட்டிருப்பான்.அந்த கட்டையால் வட்ட வடிவ கருவியில் அடித்துக் கொண்டே வருவான்..சங்கும் ஊதுவான்.இரவின் மயான அமைதிக்கு அவனது வரவு மனதிற்கு பயத்தை கொடுக்கும்.யாரும் அவனை பார்க்க முயல மாட்டார்கள்..அவனுக்கு வாசலில் காணிக்கையாக ரூபாய் வைப்பார்கள்...குறி வேறு சொல்வான்.மறு நாள் பெரியவர்கள் எல்லாரும் கூடி யாரைப் பற்றி எந்த வீட்டைப் பற்றி ராப்பாடி குறி கூறினான் என இவர்கள் குறிப்பு எடுப்பார்கள்..நாங்கள் அவனைப் பற்றி பயத்தோடு எங்களுக்குள் பேசிக் கொள்வோம்..இப்ப ராப்பாடி இடத்தை தொல்லை காட்சிகள் பிடித்து கொண்டு விட்டன..

En ninaivu galin e pathivu--my dance photo