Wednesday, June 20, 2012

en ninaivugalin e -pathivu -animation




en ninaivugalin e -pathivu privacy-thagaval

ரு A. P. J. அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு,SR ஜிண்டால் அவார்டாக ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. அதனை தலா 25 லட்ச ரூபாயாகப் பிரித்து நான்கு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளித்துவிட்டார்.
அந்த நிறுவனங்கள் வருமாறு:
1. Agastya International Foundation for Rural Mobile Science Laboratories for Bihar villages
2. Amar Seva Sangam for Educating rural disabled children
3. The Little Hearts Care Foundation for Treatment of ailing hearts of needy rural children
4. To Government Public Libraries in Rameshwaram and Pamban in Tamil Nadu for enhancing library facilities with computers and books.
உங்களுக்கும் ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்று தோன்றினால்,What Can I Give Mission என்ற நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம், என்று கூறியுள்ளார்.

en ninaivugalin e -pathivu privacy-thagaval

கனவு காண்பவர்கள் எல்லோருமே தோற்பது இல்லை.
கனவு மட்டுமே காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால்,
வெற்றி பெறக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு.

ஆகவே எந்த சூழ்நிலையிலும் தளர்ந்து விடாதீர்கள்.

en ninaivugalin e -pathivu privacy--thagaval

தும்பாவில் உள்ள rocket launching station இல் பணிபுரியும் விஞ்ஞானி ஒருவர் தனது குழந்தைகளை அன்று மாலை 5:30 மணிக்கு பொருட்காட்சி பார்க்க
அழைத்து செல்வதாக கூறியிருந்தார். தனது மேலதிகாரியிடம்(BOSS) தகவல் தெரிவித்தார், அவரும் போவதற்கு அனுமதி அளித்தார்.
அந்த விஞ்ஞானி வழக்கம் போல் மதிய உணவு அருந்தி விட்டு வேலையில் ஈடு பட்டார். ஆவலோடு வேலை செய்து கொண்டே இருந்ததில் தனது
குழந்தைகளிடம் கூறிய வாக்கை மறந்துபோனார். மணி 8:30 ஆனது . தனது மேலதிகாரியை தேடினார், அவரும் அங்கு இல்லை. அதான் காலையில் கூறி விட்டோமே என்று எண்ணிக்கொண்டு வீட்டிக்கு புறப்பட்டார். குழந்தைகளுக்கு குடுத்த வாக்கை காப்பாற்றாமல் அவர்களை ஏமாற்றி விட்டோமே என்ற குற்ற உணஞ்சியோடு வீட்டிற்கு சென்றார். அங்கே அவரது மனைவி மட்டும் தனியாக செய்தி தாள் வாசித்துக் கொண்டிருந்தார்.

குழந்தைகள் எங்கே என்று கேட்க அவர்களை உங்கள் மேல் அதிகாரி பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்றார் அவரது மனைவி. அந்த மேல்அதிகாரி 5:30 மணிக்கு அந்த விஞ்ஞானியை வந்து பாத்திருக்கிறார். அவர் ஆவலோடு வேலை செய்ததை பார்த்து விட்டு, இன்று இவர் புறப்பட மாட்டார் என்று எண்ணி அவரது குழந்தைகள் ஏமாந்து விட கூடாது என்பதற்காக அவரே சென்று குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றார்.

அந்த மேலதிகாரி வேறு யாரும் இல்லை!!.... நமது முன்னாள் ஜனாதிபதி, எளிமையின் சிகரம் DR. A P J அப்துல் கலாம் அவர்கள் தான்.

Sunday, June 17, 2012

en ninaivugalin e -pathivu privacy-current bill

http://tneb.tnebnet.org/tariff_new.htm

en ninaivugalin e -pathivu privacy- thathuvam

நம் உடல் என்னும் வீட்டில் தங்க,ஆசை,கோபம்,போன்ற விருந்தினர் நிறைய பேர் வருவார்கள்..நம் மனம் என்னும் எஜமான் சரியாக அந்த விருந்தினரை கையாளாவிட்டால் உடம்பு என்னும் வீடு கெட்டு விடுவது நிச்சயம்

en ninaivugalin e -pathivu -jokes

அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே..
ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற???
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி.. 


ஆசிரியை புதிதாகச் சேர வந்த சின்னப் பையனிடம்:
"ராஜா, நாலுக்குப் பிறகு என்ன சொல்லு"
"ஐந்து"
"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி, ஏழுக்குப் பிறகு என்ன வரும்?"
"எட்டு"
"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி பத்துக்குப் பிறகு என்ன வரும் சொல்லு."
"ஜேக்"


வாழ்க்கை என்பது பூனைக்கும் எலிக்கும் இடையில் நடக்கும் ஓட்டம் போல..
அதிகமாக எலியே வெற்றிபெறும்..
ஏனென்றால் பூனை ஓடுவது பசிக்காக..
ஆனால்.....
எலி ஓடுவது உயிருக்காக...
நாம் எதற்காக ஓடவேண்டும் என நாமே முடிவெடுத்துக்கொள்வோம்...


வாழ்க்கையும் ஆசிரியரும் ஒரே போல
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.
ஆசிரியல் பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைக்கிறார்
வாழ்க்கை தேர்வை வைத்து ரிசல்ட் மூலம் பாடம் சொல்லித்தருகிறது.


டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.


போலீஸ்: நேத்து ராத்திரி உங்க வீட்டுல திருடினவன் எதாவது சொல்லிட்டு போனானா..?
ஒருவர்: ஆமாம் சார்.. கோண கொப்பர கொய்யா-ன்னு ஏதோ சொல்லிட்டு போனான்..
போலீஸ்: அந்த ராஸ்கலா..? அவனுக்கு நேத்து நான் ட்யூட்டி போடலியே..?இருக்கட்டும் பேசிக்கறேன்..!

எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை
ஆனால் எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வதில்லை

கொஞ்ச நாளா ஏன் நீ *குட்நைட்* அனுப்பல???
அட்லீஸ்ட் ஒரு *ஆல்அவுட்* டாவது அனுப்பலாம்ல..
கொசு தொல்ல தாங்க முடியல...

சூரியன் எப்எம் ல வேலைக்குசேர்ந்தது தப்பா போச்சுபா..
ஏன்...
சம்பளம் கேட்டா , கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்கிறான்


இந்திய அரசு ஏன் இரண்டாவது திருமணத்தை அனுமதிக்கவில்லை?
ஏனெனில், ஒருவன் ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படக்கூடாது.




en ninaivugalin e -pathivu -image--3dart


en ninaivugalin e -pathivu -image-3d art


en ninaivugalin e -pathivu -image--3d art


en ninaivugalin e -pathivu -image-3d art


en ninaivugalin e -pathivu -image-3d art


en ninaivugalin e -pathivu -image-3d art


en ninaivugalin e -pathivu -image-3d art


en ninaivugalin e -pathivu -image-3d art