Saturday, January 21, 2012

privacy-fun only fun

ரொம்ப அழுதுஅடம பிடிச்சே,நாய இறக்கி விட்டுட்டு ஒன்ன தூக்கிருவேன்.

Tuesday, January 17, 2012

privacy-pongal


பொங்கல் பண்டிகையை நம் முன்னோர்கள் நன்றியைத் தெரிவிக்கும் பண்டிகையாக கொண்டாடினார்கள். நாமும், சூரியபகவானுக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாக பொங்கலை ஞாயிறன்று சிறப்பாக கொண்டாடினோம்.
இன்று திங்களன்று கொண்டாடிய மாட்டுப் பொங்கலைப் பற்றி சில வார்த்தைகள்:
 விளைச்சலுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்க  கொண்டாடப் படும் கொண்டாட்ட பொங்கல் தான் மாட்டுப் பொங்கல் .
 மாட்டுப் பொங்கல் அன்று காலை மாடுகளின் வசிப்பிடமான மாட்டுக் கொட்டகையை நன்கு கழுவி சுத்தம் செய்வர். அங்கு கோலமிட்டு பொங்கல் விட அடுப்பு,பானை,மற்றும் பூஜை செய்ய பூஜை சாமான்களையும் எடுத்து வைப்பர்.
மாடுகளை குளிப்பாட்டி அலங்கரிப்பர்.பூ,பொட்டு வைத்து மகிழ்வர். அதன் கொம்புகளில் விதவிதமான வர்ணங்களை அழகாக தீட்டுவார்கள்.
பின் கோ பூஜையை செய்வர். அதாவது ஆரத்தி கரைத்து மாடுகளுக்கு சுற்றுவர். தீப ஆரத்தி காட்டுவார்கள்.
பின் அதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப் பட்ட பொங்கலை கனிவுடன் ஊட்டுவார்கள்.
மாடு இல்லாத வீடுகளிலும்,பொங்கலிட்டு, மாடுகள் இருக்கும் வீடுகளுக்கு பொங்கலை எடுத்துச் சென்று மாடுகளுக்கு ஊட்டுவார்கள். வாழைப் பழத்தையும் ஊட்டுவார்கள் குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர் வரை எல்லாரும் மிகவும் ஈடுபாட்டுடன் இந்த மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுவார்கள்.
ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் நலிவு இழந்து,பொலிவு,இழந்து காணப்படுகிறது.நம் முன்னோர்கள் மாதிரி இல்லாவிட்டாலும், மாடுகளுக்கு நன்றி தெரிவிக்க நம் அருகில் வசிக்கும் மாடுகளிடமாவது கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். நம் குழந்தைகளுக்கு இப் பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தை தெளிவு படுத்த வேண்டியது அவசியம்.
இல்லையென்றால் நம் பிள்ளைகளுக்கு இப்படித் தான் நாங்கள் மாட்டுப் பொங்கல் கொண்டாடினோம் என காட்ட வேண்டியது தான்.

privacy-pongal


பொங்கல்:
        உழைப்பில் கிடைத்த தானியத்தை நன்றி தெரிவிக்கும் முறையாக, தன் உற்றார் உறவினருடன் கூடி, பொங்கலிடுவார்கள்
சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்க வாசலில் திறந்த வெளியில் கோலமிட்டு விளக்கு, காய்கறிகள், கரும்பு,மஞ்சள் கொலை, சாணிப் பிள்ளையார்,எல்லாம் வைத்து மண் அடுப்பில், பொங்கல் பானையை வைப்பார்கள். ஓலை எறித்து,பாலைக் காய்ச்சுவார்கள். பால் என்றால் மாட்டுப் பாலோ, பாக்கட் பாலோ அல்ல. தங்கள் உழைப்பில் விளைந்த அரிசியை களைந்து அந்த தண்ணிரையே பாலாக கொண்டு காய்ச்சுவார்கள்.
பால் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்,பொங்கலோ பொங்கல்என குலவை இடுவார்கள்(குலவை என்றால் வாயைக் குவித்து கையால் மூடி,நாக்கை சுழற்றி, சத்தம் எழுப்புவார்கள்)சூரிய உதயத்திற்கு முன் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து தங்கள் நன்றியை தெரிவிப்பார்கள்.
பொங்கலன்று பெரியவர்கள் சிறியவர்களுக்கு பணம் கொடுப்பார்கள். அதை பொங்கல்படி என்பர்.

மாட்டுப் பொங்கல்:
                   உழவர்களின் நண்பனான மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.அன்று தங்கள் வீட்டு மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரிப்பர். கொம்புகளில் வண்ணங்களை தீட்டுவார்கள். மாட்டுக் கொட்டகையில் பொங்கலிட்டு, மாடுகளுக்கு படைப்பர். கோ பூஜை பண்ணுவார்கள்.
தமிழகத்தில் கொம்புகள் கூர்சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, தமிழரின் வீரத்திற்கும், வீரத்துடன் ஒன்றிணைந்த பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் ஒரு முறை இறங்கிய காளையர் எவரும் அடுத்த ஆண்டும் இறங்கி தங்கள் திறனை தொடர்ந்து நிரூபிக்காமல் இருப்பதில்லை. உடல் பலம் உள்ளவரை ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு, தங்கள் உயிரை பணயமாக வைத்து தமிழரின் வீர மரபை தொடர்ந்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் பல ஊர்களில் ஒரு காலத்தில் தீவிரமாக காளை அடக்குவதில் போட்டி போட்டவர்கள், இன்று வயது முதிர்ந்த நிலையிலும் கூட, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் பட்டிக்குச் சென்று, சீரிக் கொண்டு பாய்ந்துவரும் காளை ஒன்றை தொட்டுவிட்டு வீடு திரும்பும் வழக்கம் இன்றும் உள்ளது.


திருநெல்வேலியில் இந் நாளை கரிநாள் என்றும் சொல்வர்.அதாவது கடைவைத்திருப்பவர்கள் அன்று க்டைதிறக்க மாட்டார்கள். அவர்கள் வருடத்தில் இந் நாளிலேயே முழு ஓய்வு எடுப்பர். குடும்பத்துடன் தண்ணீர் கரைக்கு செல்வர். பொங்கலன்று சமைத்த குழம்பு,,அவியல், பொரியல் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ,சூடு பண்ணி எடுத்து செல்வர். இதை சுண்டக் கறி என்று கூறுவார்கள். சிலர் மறுமாற்றம் என்றும் சொல்வார்கள்.பொங்கலன்று பொங்கிய சாதத்தில் நீர் ஊற்றி,வைத்திருப்பர். அந்த சாத்த்துடன்,சுண்டக் கறி வைத்து சாப்பிடுவார்கள்.. 

காணும் பொங்கல்:
                    கிராமத்தில் மாட்டுப் பொங்கலுக்கு, தண்ணீர் கரை அதாவது ஆறு, நீர்வீழ்ச்சி,போன்ற இட்த்திற்கு செல்வர். சென்னை போன்ற நகரத்தில் காணும் பொங்கலன்று, பீச், பார்க், மியூசியம், போன்ற இடங்களுக்கு தங்கள் சொந்தங்களூடன் சென்று மகிழ்வர்.

நானறிந்த பொங்கலை உங்களோடு பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி...
மீண்டும் எனது பொங்கல் நல்வாழ்த்தை கூறி கட்டுரையை நிறைவு செய்கிறேன்......நன்றி......நன்றி.....
வே.முத்துலஷ்மி    



privacy-pongal


மார்கழியில் ஏற்கனவே நம் உடல் குளிர்ந்திருக்க ,நம் மனதையும் குளிர்விக்க பிறக்கிறாள் தை மகள்.உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள்.பொங்கல் தமிழர்களின் திரு நாள், உழவர்களின் திரு நாள்,மட்டுமல்ல, உணவு நாகரிகத்திற்கே ஒரு தாயும் இந்த பொங்கல் தான். தாயும் அவள் தான், மகளும் அவள் தான்.

பொங்கலை நம் முன்னோர்கள் நான்கு நாட்களாக கொண்டாடினார்கள்.உழைத்த உடலுக்கு ஒரு ஆசுவாசம் இந்த பொங்கல் நம் முன்னோருக்கு..
பொங்கலுக்கு முந்தின தினம்—போகி
அடுத்த தினம்-பொங்கல்
மூன்றாம் நாள்—கரி நாள்,
நான்காம் நாள்—காணும் பொங்கல்
போகிப் பொங்கல்:
                  அந்த காலத்தில் பொருள்களை யெல்லாம் கிடைக்கும் சீசனில் சேமித்து வைத்திருந்தார்கள்..சேமித்த பொருள்களில் கெட்டுப்போனது, சேமிக்க பயன்படுத்திய பாத்திரங்களின் சீர்கேடு என அவர்களுக்கு நிறைய வேலை இருந்தது.எனவே, போகி அன்று வீட்டை சுத்தப்படுத்த வேண்டாத்தை அப்புறப் படுத்தினார்கள். அவற்றை எரிக்க டயர் போன்றவற்றையும் பயன்படுத்தினர்.
  இந்த காலத்தில் எல்லா  பொருள்களும் எல்லா சீசனிலும் கிடைக்கிறது.நாம் சேமிக்க வேண்டிய அவசியமுமில்லை.நிறைய முன்னேற்றங்களை பெற்றிருக்கிறோம்.(குப்பைகளை கூட வீட்டில் இருந்து அகற்ற குப்பைதொட்டி.காம் பெற்றிடுக்கிறோம்)எனவே  தேவையான பொருள்களை மட்டும் அவற்றின் பயனை ந்ன்கு அறிந்த பின் வாங்கி, முறையாக பயன்படுத்துவோமானால் வீட்டில் வேண்டாத பொருள்களே இருக்காது. போகி கொண்டாடுகிறோம் பேர்வழி என்று, டயர் போன்ற பொருள்களை எறித்து சுற்றுச் சூழலை மாசுபடுத்த வேண்டாமே...முன்னோர்களின் எண்ணங்களை ,செயல்களை சேதப்படுத்தாமல், புதிய முறையில் போகி கொண்டாடலாமே;;;
அதாவது நம் மனத்திலுள்ள கெட்ட எண்ணங்கள், வேண்டாத ஆசைகள்,சோம்பேறித்தனம், போன்ற செயல்களை எறிப்போமே, சுற்று சூழலில் பாதிப்பை ஏற்படுத்தாமல்...

privacy-pongal


இப்போது வீட்டிற்கு ஒரு குழந்தை இரு குழந்தை என இருப்பதாலே மாமா,அத்தை.சித்தி,சித்தப்பா,உறவு முறைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருது.இருந்தாலும் நம்ம பிள்ளைகளுக்கு இந்த சீர் சம்பிரதாயத்தையும்,அதன் சந்தோஷத்தையும்,சொல்லிக் கொடுத்து. தலைமுறை தாண்டியும்,பொங்கல் சீரை தழைக்க வைக்க வேண்டும்.
என்ன நண்பர்களே பொங்கல் சீர் கொடுக்க இல்லை வாங்க கிளம்பிவிட்டீர்கள் தானே?

தமிழன்னை புகழ் பாடி தரணியெல்லாம் வெற்றி கொள்ள பொங்குக பொங்கல்