Tuesday, January 17, 2012

privacy-pongal


ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டில் பிறந்த பெண்ணுக்கு சீர் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நேரம் இது.
சீர் கொடுத்தால் சகோதரன்என்று கூறி, சீர் செய்ய வைத்திருக்கிறார்கள் முன்னோர்.சகோதரன் சீர் எடுத்து வருவது அப்பெண்ணிற்கு பெருமை மட்டுமல்ல.பிறந்த வீடு தருகிற பெரிய மாரல் சப்போர்ட்..
இந்த சீரை பொங்கல்படி என்றும் கூறுவார்கள்
ஒரு பொண்ணுக்கு அவ கணவர் எவ்வளவு தான் வாங்கி கொடுத்தாலும் பிறந்த வீட்டில அவ அண்ணன் தம்பி வாங்கிக் கொடுக்கற சீர் பொருள்களைத் தான் பெரிதாக பெருமையாக சந்தோஷமாக நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக்குவா.
சம்பந்தி வீட்டிற்கு அடிக்கடி செல்வதை கெளரவ குறைச்சலாக நினைக்கிற பெண்ணைப் பெற்றவங்க கூட இப்படி சீருங்கற பெயரில் கம்பீர நடை போடுவார்கள்.
 ஏதாவது பிரட்சனையில் மனஸ்தாபமிருந்தாலும் இந்த சீர் கொடுக்கிற சாக்கில் அந்த மனஸ்தாபம் மறைந்துவிடும்.
சீர் கொடுப்பதிலும் ச்ந்தோஷமிருக்கு, வாங்குவதிலும் சந்தோஷமிருக்கு. அதை அனுபவித்து உணர்தவர்களுக்கு புரியும்.

வாழ்க்கை ஓடுகிற வேகத்துல அண்ணன் தம்பி நேரில் வந்து சீர் கொடுக்க முடியா விட்டாலும், நம் முண்ணோர் கூறிய படி பொங்கல் சீரை மறக்காமல்
அனுப்பி நீங்களும் சந்தோஷப் பட்டு. உங்கள் உடன்பிறப்பிற்கும் சந்தோஷத்தை கொடுங்கள்.

No comments:

Post a Comment