Thursday, December 6, 2018

Enninaivugalin epathivu...pen

#பெண்களைப் பற்றி *#வில்லியம்_கோல்டிங்* என்னும் ஆங்கில
நாவலாசிரியர்
சொல்லுவது இதுதான்:-

“பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று *முட்டாள்தனமாக* எண்ணிக்
கொண்டிருக்கின்றனர்
என்றே நான்
நினைக்கிறேன்…….

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை;

மாறாக,
ஆண்களைவிட
*பன்மடங்கு*
*உயர்ந்தவர்கள்*
பெண்கள்…..

ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை *பெரிதாக்கி* சிறப்பு செய்துவிடுவாள்….

உன் *சக்தியைக்* கொடு, அவள் உனக்கு ஒரு *குழந்தையைத்* தருவாள்….

ஒரு *வீட்டைக்* கொடுத்தால் அதனை அவள் *குடும்பமாக* மாற்றிக்காட்டுவாள்……

நீ *மளிகைப்* பொருட்களைக் கொடுத்தால் அவள் *விருந்து* படைப்பாள்…..

உன் *புன்னகையை* அளித்தால் அவள் தன் *இதயத்தை* உனக்குக் கொடுத்துவிடுவாள்……..

நீ கொடுப்பது எதுவாயினும் அதனை *பலமடங்கு* பெரிதாக்குவது பெண்ணின் குணம்….

எனவே நீ அவளுக்கு *சிறிய அளவில் ஏதாவது  தொல்லை* கொடுத்தாயானால் அவள் உடனே அதையே *டன் கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள்* என்பதையும் புரிந்துகொள்…