Saturday, July 21, 2012

en ninaivugalin e -pathivu -thathuvangal-image


en ninaivugalin e -pathivu mothers spl


en ninaivugalin e -pathivu -thathuvangal


en ninaivugalin e -pathivu -thathuvangal


en ninaivugalin e -pathivu -thathuvangal


en ninaivugalin e -pathivu riyal life


en ninaivugalin e -pathivu -maths magic


en ninaivugalin e -pathivu -thathuvangal


en ninaivugalin e -pathivu -thathuvangal



en ninaivugalin e -pathivu --mother's spl.


en ninaivugalin e -pathivu -thathuvangal


en ninaivugalin e -pathivu mother's spl


en ninaivugalin e -pathivu uravukal


en ninaivugalin e -pathivu vetri&tholvi


en ninaivugalin e -pathivu -thathuvangal


en ninaivugalin e -pathivu thathuvangal kannadasan


en ninaivugalin e -pathivu privacy--thathuvangal


en ninaivugalin e -pathivu privacy-thathuvangal


en ninaivugalin e -pathivu privacy-relation


en ninaivugalin e -pathivu -benifit of banana

மன இறுக்கத்தை போக்கும் வாழைப்பழம்

எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் சாமான்ய மக்களும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள், வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன.

ஆப்பிளை விட சிறந்தது, பல வகை சத்துகளைக் கொண்டது

ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். கார்போஹைட்ரேட் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது. பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது.. வைட்டமின் ஏ மற்றும் இரும்புசத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.

மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவு ஆப்பிளைவிட வாழைப்பழத்தில் இரண்டு மடங்கு கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது உடலுக்கு கூட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன.

நரம்புக்கு வலு சேர்த்து புத்துணர்ச்சி தரக்கூடியது

சர்க்ககரை பொருட்களான சுக்ரோஸ், பீக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை இதில் உள்ளது.. இத்துடன் எளிதில் ஜீரணத்தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உள்ளது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்..

பயிற்சியின் போது தங்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது, இது நரம்பு மண்டலத்தில் வலு சேர்க்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாது..

மன இறுக்கத்தை போக்குகிறது, மலச்சிக்கலுக்கு அருமருந்தாகும்

பெரும்பாலான நோய்களுக்கு மூலக்காரணமாக திகழ்வது.. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் மலக்குடலை சுத்தம் செய்யும் காரணியாக திகழ்கின்றன. இதில் உள்ள நார்சத்துகளை கருத்தில் கொண்டுதான் உணவு உட்கொண்டதும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டோர் வாழைப்பழம் உட்கொண்ட பிறகு இறுக்க நிலையில் இருந்து மீண்டதாக தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் டிரைப்டோபன் என்ற வகை புரோட்டின் சத்து உள்ளது, இது உடலுக்குள் சென்றதும் செரோடோனின் ஆக மாறுகிறது. மனதை ரிலாக்ஸ் செய்யும் ஆற்றல் இதற்கு உள்ளது.

ரத்தகொதிப்பை சீராக்குகிறது.

மிகுதியான அளவு கொண்ட ரத்தக் கொதிப்பு பக்கவாதம் உள்ளிட்ட மோசமான பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் உப்பு அளவு குறைந்த தன்மை ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தி சீரான ரத்த ஒட்டத்திற்கு வழிவகுக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து காலையில் வெறும் வயிற்றில் சிலருக்கு பலவீனத்தையும் படபடப்பையும் ஏற்படுத்தும். வாழைப்பழத் துண்டுகள் சிலவற்றை உட்கொள்வதன் மூலம் இப்பிரச்சனையை தீர்க்கலாம்.

தோலுக்கு அருமருந்து, தலைசுற்றல் அகலும்

கொசு மற்றும் சிறிய பூச்சிகள் கடி காரணமாக தோலில் தடிப்புகள் ஏற்பட்டு நமைச்சலை உண்டாக்கும். இந்த பகுதிகளில் மருந்துகளை பூசுவதற்கு பதில் வாழைப்பழத் தோலின் உட்புறத்தோலை தேய்த்துப் பாருங்கள். வீக்கம் மற்றும் நமைச்சலுக்கு இது அருமருந்து.

வாழைப்பழம் தேன் மற்றும் பால் கலந்த ஜீஸ் தலைசுற்றலை உடனே விரட்டும் வயிற்றை இதப்படுத்தும் குணம் வாழைப்பழத்திற்கு உண்டு மேலும் தேனுடன் இணைந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. பாலுடன் சேர்ந்து உடலுக்கு போஷாக்கும் கொடுக்கிறது.

உடல் சூட்டை குறைக்கும், வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.

வயிற்றுப்புண்ணுக்கு(அல்சர்) கொண்டோர் காரமாக எண்ணெய்யில் பொரித்த பண்டங்களோ சாப்பிடக்கூடாது. இத்தகையோர்க்கு மென்மையான சுவைமிகுந்த வாழைப்பழம் ஒர் அற்புதமான உணவுப்பொருளாகும். நெஞ்செரிச்சலுக்கு காரணமான அமிலத்தன்மையும் இது கட்டுப்படுத்துகிறது.

வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழ வகையாகும். உடல் சூட்டை குறைப்பதோடு மன இருக்கத்தையும் போக்குகிறது. இதில் உள்ள நோய் எதிர்ப்பு சத்துப்பொருட்கள், பருவகால மாற்றங்களால் ஏற்படும் நோய் தொற்றுகள் உடலை அண்டாமல் பாதுகாக்கின்றன.

நிக்கோடினில் இருந்து பாதுகாக்கிறது.

புகைபிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீர் என விட்டு விடுவர். இவ்வாறு விடுவது தான் சிறந்தது. இப்பழக்கம் காரணமாக நிக்கோடின் என்ற நச்சுபொருள் ஏற்கனவே உடலில் சேர்த்திருக்கும். வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துப்பொருட்கள் இந்த நிக்கோடினை கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இருந்து அகற்றிவிடும்.

en ninaivugalin e -pathivu -benefite of mango


பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன.இவை இருதய நோய்,விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்கிறது.

மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது.அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது.ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்வது நல்லது.

மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ,மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை.வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு,சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.


எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.


100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது. உத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் இமபசந்த் ,அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு ,இமபசந்த் என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்:

நீர்=83%
மாவுப்பொருள்=15%
புரோட்டின்=0.6%
கொழுப்பு=0.4%
கால்சியம்=12 யூனிட்
தாது உப்புக்கள்=0.4%
இரும்புத் தாது=0.5 யூனிட்
நார்ச்சத்து=0.8%
வைட்டமின் C=30 யூனிட்
வைட்டமின் A=600 யூனிட்
வைட்டமின் B1=0.3 யூனிட்
வைட்டமின் B2=0.04 யூனிட்
நியாசின்=0.3 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் மாம்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.

மருத்துவக் குணங்கள்:

மனிதர்களுக்கு வைட்டமின் A தேவை தினசரி 5000 யூனிட்டுகள். மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது. கண் பார்வை, மாலைக்கண் நோயை எதிர்க்கிறது. வைட்டமின் C அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. நோஞ்சன் பிள்ளைகள் உடல் தெம்பும் எடையும் பெறுகின்றனர்.
இருதயம் வலிமை பெறும். பசி தூண்டும்.
உடல் தோல், நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும். கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது இரத்த அணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறுகிறது.

en ninaivugalin e -pathivu - benefite of tomato

தக்காளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்..!

தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.

தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.

இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.