Wednesday, January 2, 2013

en ninaivukalin e-pathivu ----Thagavalgal



என்னால் எதுவும் முடியாது---கோழைத்தனம்
என்னால் எல்லாமே முடியும்—அகங்காரமான முட்டாள் தனம்
எது என்னால் முடியுமோ அதனை முடிக்க என்னால் முடியும் கடவுள் கருணை இருந்தால்-------வாழ்க்கைப் பாதை
இதயத்தை பேண்:
விலை மதிப்புள்ள பீரோவில் தேவையற்ற துணிகளையோ, பொருள்களையோ வைக்கிறோமா? இல்லையே.....அப்படி இருக்கும் போது
விலைமதிப்பில்லாத இதயத்தில் வேண்டாத நினைவுகளையும், ஒழுக்கம் கெட்ட சிலரையும்  ஏன் வைக்க வேண்டும்.?



1. அருகாமையில் இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்குவதை விடுத்து சற்று

தொலைவாக சென்றாலும் Wholesale கடைகளில் சென்று சகாய விலையில் பொருட்களை

வாங்குங்கள்.


2. கடைக்கு போவதற்கு முன் என்ன வேண்டும் என்று பட்டியலிட்டு வாங்குங்கள்.


3. அவற்றை மட்டும் வாங்குங்கள். Super Market சென்று கண்ணில்

பட்டதையெல்லாம் வாங்கி வரவேண்டாம்.


4. தெரிந்த Brand மட்டும் வாங்குங்கள். புதிய முயற்சிகள் வேண்டாம்.


5. Toiletries அனைத்தும் இந்திய Brand வாங்குவதால் நிறைய


மிச்சப்படுத்தலாம்.



“வாக்கிங்” போற பார்ட்டியா நீங்க ?" உடற்பயிற்சி
என்றாலே பெரும்பாலானவர்கள் சொல்லும் அறிவுரை “நடப்பது”
தான். தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து
உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு
குறையத் துவங்கும் என்றெல்லாம் மக்கள் பயன்களை அடுக்குவதுண்டு.


அறிவுரையைக் கேட்பவர்கள் கேட்க மறந்து போகும்
விஷயங்களில் சில எப்படி நடக்கவேண்டும், எத்தனை வேகமாக நடக்க வேண்டும்
போன்றவை.


உலகெங்கும் பலருக்கும் இருக்கக் கூடிய இந்தக்
குழப்பத்தை அமெரிக்க
விஞ்ஞானிகள் இப்போது ஒரு ஆராய்ச்சி மூலம் தீர்த்து வைத்திருக்கிறார்கள்.


அதாவது நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள்
எடுத்து வைத்து நடப்பதே
அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள்
நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் அவர்கள்.


எதிர்பார்க்கும் பயன் கிடைக்க வேண்டுமெனில்
ஆண்களின் நடை வேக விகிதம்
நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும் எனவும் ,
பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும் எனவும் அவர்களுடைய ஆய்வு
முடிவு தெரிவிக்கிறது.


97 பேரை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சி இறுதி
முடிவாக, ஆண்களோ, பெண்களோ
நிமிடத்துக்கு சுமார் நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பது நல்லது எனும்
முடிவை எட்டியிருக்கிறது.


இந்த ஆராய்ச்சி ஆரோக்கியமான மக்களை வைத்து
எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆரோக்கியம் குறைவானவர்களோ, மிக அதிக எடை கொண்டவர்களோ அதற்கு ஏற்றார்போல்
நடையின் வேகத்தை மிதப்படுத்தலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி தொடர்பான
பேராசிரியர் கேரி டோனோவன்.


தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது. அதுவும்
நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.


எனவே, அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே
வந்து நடங்கள்.


கவனம் தேவை, நிமிடத்துக்கு நூறு அடிகள் !







நமது கணினியில் பயன்படுத்தும் சாதாரண அப்ளிகேசன்களின் எண்ணிக்கையையும், ‘சைசையும்’ குறைக்கவேண்டும். உதாரணமாக திரைப்படங்கள் பார்க்க நீங்கள் ‘விண்டோஸ் மீடியா பிளேயர்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக VLC  மீடியா பிளேயர் பயன்படுத்திப்பாருங்கள்.

ஏனினில் விண்டோஸ் மீடியா பிளேயரானது அதிக அளவு ரேம் பகுதியை பயன்படுத்தும். இதனால் கணினியின் வேகம் குறையும்.

அதேபோல நீங்கள் டாகுமென்ட்களை படிப்பதற்காக ‘மைக்ரோசாப்ட் ஆபீஸ்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக ‘ஓபன் சோர்ஸ்’ அப்ளிகேசன்கள் சிலவற்றை பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் கணினியானது வேகம்பெரும்.

இதற்கான ஓபன் சோர்ஸ் அப்ளிகேசன்கள் சில,
ஃபாக்ஸ் இட் ரீடர்,
அபிவோர்ட்,
ஓபன் ஆபீஸ்,
ஆட்டோமேட்டிக் அப்டேட்ஸ்:

நமது கணினி அவ்வப்போது அதை அப்டேட் செய்யவா? இதை அப்டேட் செய்யவா? என கேட்டுக்கொண்டே இருக்கும். நாமும் அதை ‘நாளை’தள்ளிவைத்து விடுவோம். இது பெரிய வேலைகூட இல்லை. நாம் இப்படிச்செய்வதால் கணினியின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் இதன் வேகமும் குறையும்.

எனவே my computer -> properties -> Automatic updates என்றவரிசையில் தேர்வுசெய்து உடனுக்குடன் உங்கள் கணினியை அப்டேட் செய்யுங்கள். அல்லது அப்டேட் செக்கர் என்ற அப்ளிகேஷனை உங்கள் கணினியில் நிறுவினால் அதுவே அப்டேட் செய்துகொள்ளும்.

கண்டிப்பாக இந்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றினால் உங்களது கணினியானது வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். வித்யாசத்தை நீங்களே உணருங்கள் நண்பர்களே!





நமது கணினியில் பயன்படுத்தும் சாதாரண அப்ளிகேசன்களின் எண்ணிக்கையையும், ‘சைசையும்’ குறைக்கவேண்டும். உதாரணமாக திரைப்படங்கள் பார்க்க நீங்கள் ‘விண்டோஸ் மீடியா பிளேயர்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக VLC  மீடியா பிளேயர் பயன்படுத்திப்பாருங்கள்.

ஏனினில் விண்டோஸ் மீடியா பிளேயரானது அதிக அளவு ரேம் பகுதியை பயன்படுத்தும். இதனால் கணினியின் வேகம் குறையும்.

அதேபோல நீங்கள் டாகுமென்ட்களை படிப்பதற்காக ‘மைக்ரோசாப்ட் ஆபீஸ்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக ‘ஓபன் சோர்ஸ்’ அப்ளிகேசன்கள் சிலவற்றை பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் கணினியானது வேகம்பெரும்.

இதற்கான ஓபன் சோர்ஸ் அப்ளிகேசன்கள் சில,
ஃபாக்ஸ் இட் ரீடர்,
அபிவோர்ட்,
ஓபன் ஆபீஸ்,
ஆட்டோமேட்டிக் அப்டேட்ஸ்:

நமது கணினி அவ்வப்போது அதை அப்டேட் செய்யவா? இதை அப்டேட் செய்யவா? என கேட்டுக்கொண்டே இருக்கும். நாமும் அதை ‘நாளை’தள்ளிவைத்து விடுவோம். இது பெரிய வேலைகூட இல்லை. நாம் இப்படிச்செய்வதால் கணினியின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் இதன் வேகமும் குறையும்.

எனவே my computer -> properties -> Automatic updates என்றவரிசையில் தேர்வுசெய்து உடனுக்குடன் உங்கள் கணினியை அப்டேட் செய்யுங்கள். அல்லது அப்டேட் செக்கர் என்ற அப்ளிகேஷனை உங்கள் கணினியில் நிறுவினால் அதுவே அப்டேட் செய்துகொள்ளும்.

கண்டிப்பாக இந்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றினால் உங்களது கணினியானது வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். வித்யாசத்தை நீங்களே உணருங்கள் நண்பர்களே!



இராமாயணம் ஒரு தன்னம்பிக்கை பூங்கா எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காதே. என்பது ராமாயணத்தின் ஒரு கோணம்.
பொது வாழ்வில் பதவி போனால் மரியாதை இல்லை தனி வாழ்வில் மனைவி போனால் மானமே இல்லை தன் உறுதியால் இரண்டையும் தன் காலில் விழ வைத்த தன்னம்பிக்கை தலைவன் ராமன்.

No comments:

Post a Comment