Tuesday, October 23, 2012

en ninaivugalin e -pathivu ganesha song

எந்தன் வினை தீர்த்தவனே என்னை ஆட் கொண்டவனே
சிந்தை தனிலே உறைந்த சித்பர கணபதியே

முக்கண்ணும் உடையவனே மும்மதத்து குஞ்சரனே
சிக்கறுத்த தூயவனே சித்தி புத்தி நாயகனே

மூஷீக வாஹனனே முக்திக் கனூலனே
நேசமுடன் அன்பருளம் நிறைந்த பரிபூரணனே

பந்தம் அறுத்தவனே பாசம் ஒழித்தவனே
கந்தனுக்கு முன்னவனே கலிதன்னை தீர்த்தவனே

மூவர்களை உண்டு பண்ணி முத்தொழிலும் ஈந்தவனே
தேவகுருவாக வந்து தேவர்களை காத்தவனே

நீதியில்லா கலியுகத்தில் நின்னடிமை ஆனதன்பின்
சோதனைகள் செய்யாதே சூட்சுமம் உள்ள என் குருவே

வேதங்களுக்கு  எட்டாத விசித்திரத்தை காட்டி விட்டு
சோதனைக்கும் எட்டாது சூஷமமதாய் நின்று கொண்டாய்

எல்லையற்ற காட்சி தந்து எமனுக்கிடமில்லாமல்
பல்லுயிரும் காட்சி கொள்ள பலனளித்த சின்மயமே

No comments:

Post a Comment