Friday, August 17, 2012

en ninaivugalin e -pathivu ---திருக்குறள் கதை..

”அறிவுடையார் எல்லாம் தமக்குரியர்”
திருக்குறள் கதை..

இரு குதிரை வீரர்கள் குதிரை ஓட்டப்பந்தயத்தில் பங்கெற்க விரும்பினர். ஜெயிப்பதற்காக அவர்கள் ஒரு மந்திர வாதியை அணுகினர். அவரும் ஒரு மத்து, ஒரு வாரியல் ,ஒரு செருப்பு, போன்றவற்றை மந்திரித்து கொடுத்தார்.இருவரும் இருவேறு இடங்களில் நடந்த போட்டியில் பங்கெடுத்தனர்.ஒருவர் ஜெயித்தார், ஒருவர் தோற்றார்.தோற்றவரிடம் மந்திரவாதி காரணம் கேட்டார்.
                                                                ஐயா,நீங்கள் சொன்ன மாதிரி குதிரையை முதலில் மத்தால் அடித்தேன்..அது நன்றாக ஓடியது.சுமார் 50 கி.மீ.ஸ்பீடில் ..பிறகு வாரியலால் அடித்தேன்.அது 100கி.மீ.ஸ்பீடில் ஓட தொடங்கியது..நான் அந்த வேகத்தில் கீழே விழுந்து விட்டேன்..என்றான்.

 வெற்றி பெற்றவன் சொல்லத் தொடங்கினான்.

                                                  ஐயா,எனக்கும் அதே நிலைமை தான். குதிரை ஓடிய வேகத்தில்  நானும் கீழே விழுந்துவிட்டேன். ஆனால் நான் தாங்கள் கொடுத்த செருப்பால் என்னை அடித்து ,குதிரையை விட வேகமாக ஓடி அதில் ஏறி விட்டேன்.அதனால் வெற்றி பெற்றேன் என்றான்.

No comments:

Post a Comment