Thursday, May 24, 2012

en ninaivugalin e -pathivu privacy-tirukural

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
88
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
89
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.
90

இனியவைகூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்  செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
91
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து  இன்சொலன் ஆகப் பெறின்.
92
முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்  இன்சொ லினதே அறம்.
93
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்  இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
94
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.
95
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை  நாடி இனிய சொலின்
96
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
97
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்  இம்மையும் இன்பம் தரும்.
98
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ  வன்சொல் வழங்கு வது?
99
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
100

செய்ந்நன்றி அறிதல்



செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்  வானகமும் ஆற்றல் அரிது.
101
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
102
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
103
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்  கொள்வர் பயன்தெரி வார்.
104
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
105
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
106
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
107
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
108
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த  ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
109
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை  செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
110

நடுவு நிலைமை



தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
111
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி  எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
112
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
113
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
114
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்  கோடாமை சான்றோர்க் கணி.
115
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
116
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
117
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்  கோடாமை சான்றோர்க் கணி.
118
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா  உட்கோட்டம் இன்மை பெறின்.
119
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்  பிறவும் தமபோல் செயின்.
120

அடக்கமுடைமை



அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
121
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
122
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
123
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்  மலையினும் மாணப் பெரிது.
124
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்  செல்வர்க்கே செல்வம் தகைத்து.
125
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்  எழுமையும் ஏமாப் புடைத்து.
126
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
127
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்  நன்றாகா தாகி விடும்.
128
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
129
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி  அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
130

ஒழுக்கமுடைமை



ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
131
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.
132
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
133
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்  பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
134
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
135
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்  ஏதம் படுபாக் கறிந்து.
136
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்  எய்துவர் எய்தாப் பழி.
137
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்  என்றும் இடும்பை தரும்.
138
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
139
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
140

பிறனில் விழையாமை



பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து  அறம்பொருள் கண்டார்கண் இல்.
141
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை  நின்றாரின் பேதையார் இல்.
142
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்  தீமை புரிந்து ஒழுகு வார்.
143
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்  தேரான் பிறனில் புகல்.
144
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.
145
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
146
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்  பெண்மை நயவா தவன்.
147
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு  அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
148
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்  பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
149
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்  பெண்மை நயவாமை நன்று.
150

பொறையுடைமை



அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை  இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
151
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
152
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்  வன்மை மடவார்ப் பொறை.
153
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை  போற்றி யொழுகப் படும்.
154
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
155
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.
156
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து  அறனல்ல செய்யாமை நன்று.
157
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்  தகுதியான் வென்று விடல்.
158
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்  இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
159
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்  இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
160

அழுக்காறாமை



ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து  அழுக்காறு இலாத இயல்பு.
161
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்  அழுக்காற்றின் அன்மை பெறின்.
162
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்  பேணாது அழுக்கறுப் பான்.
163
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்  ஏதம் படுபாக்கு அறிந்து.
164
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்  வழுக்கியும் கேடீன் பது.
165
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்  உண்பதூஉம் இன்றிக் கெடும்.
166
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்  தவ்வையைக் காட்டி விடும்.
167
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
168
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்  கேடும் நினைக்கப் படும்.
169
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்  பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
170

வெஃகாமை



நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்  குற்றமும் ஆங்கே தரும்.
171
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
172
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
173
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற  புன்மையில் காட்சி யவர்.
174
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்  வெஃகி வெறிய செயின்.
175
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்  பொல்லாத சூழக் கெடும்.
176
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்  மாண்டற் கரிதாம் பயன்.
177
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.
178
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்  திறன்அறிந் தாங்கே திரு.
179
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்  வேண்டாமை என்னுஞ் செருக்கு.
180

புறங்கூறாமை



அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
181
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
182
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்  அறங்கூறும் ஆக்கந் தரும்.
183
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க  முன்னின்று பின்நோக்காச் சொல்.
184
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்  புன்மையாற் காணப் படும்.
185
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
186
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி  நட்பாடல் தேற்றா தவர்.
187
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
188
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்  புன்சொல் உரைப்பான் 
பொறை.
189
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்  தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
190

பயனில சொல்லாமை



பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
191
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
192
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
193
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்  பண்பில்சொல் பல்லா ரகத்து.
194
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
195
பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்  மக்கட் பதடி யெனல்.
196
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்  பயனில சொல்லாமை நன்று.
197
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்  பெரும்பயன் இல்லாத சொல்.
198
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த  மாசறு காட்சி யவர்.
199
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க  சொல்லிற் பயனிலாச் சொல்.
200

தீவினையச்சம்



தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்  தீவினை என்னும் செருக்கு.
201
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
202
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்
.
203
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
204
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்  இலனாகும் மற்றும் பெயர்த்து.
205
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால  தன்னை அடல்வேண்டா தான்.
206
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை  வீயாது பின்சென்று அடும்.
207
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
208
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்  துன்னற்க தீவினைப் பால்.
209
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்  தீவினை செய்யான் எனின்.
210

ஒப்புரவறிதல்



கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு  என் ஆற்றுங் கொல்லோ உலகு.
211
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு  வேளாண்மை செய்தற் பொருட்டு.
212
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
213
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்  செத்தாருள் வைக்கப் படும்.
214
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
215
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்  நயனுடை யான்கண் படின்.
216
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
217
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்  கடனறி காட்சி யவர்.
218
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர  செய்யாது அமைகலா வாறு.
219
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்  விற்றுக்கோள் தக்க துடைத்து.
220

ஈகை



வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்  குறியெதிர்ப்பை நீர துடைத்து.
221
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்  இல்லெனினும் ஈதலே நன்று.
222
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள.
223
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
224
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை  மாற்றுவார் ஆற்றலின் பின்.
225
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
226
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
227
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை  வைத்திழக்கும் வன்க ணவர்.
228
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
229
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
230

புகழ்



ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
231
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று  ஈவார்மேல் நிற்கும் புகழ்.
232
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
233
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
234
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்  வித்தகர்க் கல்லால் அரிது.
235
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்  தோன்றலின் தோன்றாமை நன்று.
236
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?
237
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்  எச்சம் பெறாஅ விடின்.
238
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா  யாக்கை பொறுத்த நிலம்.
239
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய  வாழ்வாரே வாழா தவர்.
240

No comments:

Post a Comment