Thursday, May 24, 2012

en ninaivugalin e -pathivu privacy-tirukkural

தெரிந்துதெளிதல்



அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்  திறந்தெரிந்து தேறப் படும்.
501
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்  நாணுடையான் சுட்டே தெளிவு.
502
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்  இன்மை அரிதே வெளிறு.
503
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
504
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்  கருமமே கட்டளைக் கல்.
505
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
506
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
507
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை  தீரா இடும்பை தரும்.
508
தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
509
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்  தீரா இடும்பை தரும்.
510

தெரிந்துவினையாடல்



நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
511
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
512
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்  நன்குடையான் கட்டே தெளிவு.
513
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்  வேறாகும் மாந்தர் பலர்.
514
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்  சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
515
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு  எய்த உணர்ந்து செயல்.
516
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து  அதனை அவன்கண் விடல்.
517
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
518
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக  நினைப்பானை நீங்கும் திரு.
519
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்  கோடாமை கோடா துலகு.
520

சுற்றந்தழால்



பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
521
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
522
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்  கோடின்றி நீர்நிறைந் தற்று.
523
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்  பெற்றத்தால் பெற்ற பயன்.
524
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய  சுற்றத்தால் சுற்றப் படும்.
525
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்  மருங்குடையார் மாநிலத்து இல்.
526
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்  அன்னநீ ரார்க்கே உள.
527
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்  அதுநோக்கி வாழ்வார் பலர்.
528
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும்.
529
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்  இழைத் திருந்து எண்ணிக் கொளல்.
530

பொச்சாவாமை



இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
531
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை  நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
532
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து  எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
533
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை  பொச்சாப் புடையார்க்கு நன்கு.
534
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை  பின்னூறு இரங்கி விடும்.
535
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை  வாயின் அதுவொப்பது இல்.
536
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்  கருவியால் போற்றிச் செயின்.
537
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது  இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
538
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
539
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
540

செங்கோன்மை



ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்  தேர்ந்துசெய் வஃதே முறை.
541
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்  கோல் நோக்கி வாழுங் குடி.
542
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
543
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
544
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட  பெயலும் விளையுளும் தொக்கு.
545
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
546
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை  முறைகாக்கும் முட்டாச் செயின்.
547
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்  தண்பதத்தான் தானே கெடும்.
548
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
549
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
550

கொடுங்கோன்மை



கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து.
551
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்  கோலொடு நின்றான் இரவு.
552
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்  நாடொறும் நாடு கெடும்.
553
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்  சூழாது செய்யும் அரசு.
554
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே  செல்வத்தைத் தேய்க்கும் படை
555
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்  மன்னாவாம் மன்னர்க் கொளி.
556
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்  அளியின்மை வாழும் உயிர்க்கு.
557
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா  மன்னவன் கோற்கீழ்ப் படின்.
558
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி  ஒல்லாது வானம் பெயல்.
559
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்  காவலன் காவான் எனின்.
560

வெருவந்தசெய்யாமை



தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்  ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
561
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
562
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்  ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
563
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
564
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்  பேஎய்கண் டன்னது உடைத்து.
565
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்  நீடின்றி ஆங்கே கெடும்.
566
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்  அடுமுரண் தேய்க்கும் அரம்.
567
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்  சீறிற் சிறுகும் திரு.
568
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்  வெருவந்து வெய்து கெடும்.
569
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது  இல்லை நிலக்குப் பொறை
.
570

கண்ணோட்டம்



கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை  உண்மையான் உண்டிவ் வுலகு.
571
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்  உண்மை நிலக்குப் பொறை.
572
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்  கண்ணோட்டம் இல்லாத கண்.
573
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்  கண்ணோட்டம் இல்லாத கண்.
574
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்  புண்ணென்று உணரப் படும்
575
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ  டியைந்துகண் ணோடா தவர்.
576
கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்  கண்ணோட்டம் இன்மையும் இல்.
577
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு  உரிமை உடைத்திவ் வுலகு.
578
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்  பொறுத்தாற்றும் பண்பே தலை.
579
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க  நாகரிகம் வேண்டு பவர்.
580

ஒற்றாடல்



ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்  தெற்றென்க மன்னவன் கண்.
581
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்  வல்லறிதல் வேந்தன் தொழில்.
582
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்  கொற்றங் கொளக்கிடந்தது இல்.
583
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.
584
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்  உகாஅமை வல்லதே ஒற்று.
585
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
586
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
587
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்  ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
588
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
589
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்  புறப்படுத்தான் ஆகும் மறை
.
590

ஊக்கமுடைமை



உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்  உடையது உடையரோ மற்று.
591
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை  நில்லாது நீங்கி விடும்.
592
க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்  ஒருவந்தம் கைத்துடை யார்.
593
க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா  ஊக்க முடையா னுழை.
594
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
595
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
596
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்  பட்டுப்பா டூன்றுங் களிறு.
597
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
598
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
599
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்  மரம்மக்க ளாதலே வேறு.
600

மடியின்மை

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்  மாசூர மாய்ந்து கெடும்.
601
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
602
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
603
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
604
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
605
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்  மாண்பயன் எய்தல் அரிது.
606
இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து  மாண்ட உஞற்றி லவர்.
607
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு  அடிமை புகுத்தி விடும்.
608
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
609
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்  தாஅய தெல்லாம் ஒருங்கு.
610

ஆள்வினையுடைமை

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்  பெருமை முயற்சி தரும்.
611
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
612
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே  வேளாண்மை என்னுஞ் செருக்கு.
613
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை  வாளாண்மை போலக் கெடும்.
614
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்  துன்பம் துடைத்தூன்றும் தூண்.
615
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை  இன்மை புகுத்தி விடும்.
616
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
617
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து  ஆள்வினை இன்மை பழி.
618
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்  மெய்வருத்தக் கூலி தரும்.
619
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்  தாழாது உஞற்று பவர்.
620

இடுக்கணழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
621
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்  உள்ளத்தின் உள்ளக் கெடும்.
622
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு  இடும்பை படாஅ தவர்.
623
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
624
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
625
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று  ஓம்புதல் தேற்றா தவர்.
626
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்  கையாறாக் கொள்ளாதாம் மேல்.
627
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்  துன்பம் உறுதல் இலன்.
628
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்  துன்பம் உறுதல் இலன்.
629
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்  ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
630
அரசியல் முற்றிற்று

அமைச்சியல்



அமைச்சு

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்  அருவினையும் மாண்டது அமைச்சு.
631
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு  ஐந்துடன் மாண்டது அமைச்சு.
632
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.
633
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்  சொல்லலும் வல்லது அமைச்சு.
634
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
635
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்  யாவுள முன்நிற் பவை.
636
செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து  இயற்கை அறிந்து செயல்.
637
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
638
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்  எழுபது கோடி உறும்.
639
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்  திறப்பாடு இலாஅ தவர்.
640

சொல்வன்மை



நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
641
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
642
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்  வேட்ப மொழிவதாம் சொல்.
643
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்  பொருளும் அதனினூஉங்கு இல்.
644
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை  வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
645
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்  மாட்சியின் மாசற்றார் கோள்.
646
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை  இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
647
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது  சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
648
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
649
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.
650

வினைத்தூய்மை



துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.
651
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
652
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை  ஆஅதும் என்னு மவர்.
653
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
654
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்  மற்றன்ன செய்யாமை நன்று.
655
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க  சான்றோர் பழிக்கும் வினை.
656
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்  கழிநல் குரவே தலை.
657
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்  முடிந்தாலும் பீழை தரும்.
658
அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்  பிற்பயக்கும் நற்பா லவை
.
659
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
660

வினைத்திட்பம்



வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்  மற்றைய எல்லாம் பிற.
661
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்  ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
662
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்  எற்றா விழுமந் தரும்.
663
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
664
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்  ஊறெய்தி உள்ளப் படும்.
665
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்  திண்ணியர் ஆகப் பெறின்.
666
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு  அச்சாணி அன்னார் உடைத்து.
667
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது  தூக்கங் கடிந்து செயல்.
668
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
669
எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்  வேண்டாரை வேண்டாது உலகு.
670

வினைசெயல்வகை



சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
671
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
672
ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்  செல்லும்வாய் நோக்கிச் செயல்.
673
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்  தீயெச்சம் போலத் தெறும்.
674
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்  இருள்தீர எண்ணிச் செயல்.
675
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்  படுபயனும் பார்த்துச் செயல்.
676
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை  உள்ளறிவான் உள்ளம் கொளல்.
677
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்  யானையால் யானையாத் தற்று.
678
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
679
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்  கொள்வர் பெரியார்ப் பணிந்து.
680

தூது



அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்  பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
681
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று.
682
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்  வென்றி வினையுரைப்பான் பண்பு.
683
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
684
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி  நன்றி பயப்பதாந் தூது.
685
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்  தக்கது அறிவதாம் தூது.
686
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
687
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்  வாய்மை வழியுரைப்பான் பண்பு.
688
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்  வாய்சேரா வன்கணவன்.
689
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு
உறுதி பயப்பதாம் தூது.
690

மன்னரைச் சேர்ந்தொழுதல்



அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
691
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.
692
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்  தேற்றுதல் யார்க்கும் அரிது.
693
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்  ஆன்ற பெரியா ரகத்து.
694
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை  விட்டக்கால் கேட்க மறை.
695
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
696
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்  கேட்பினும் சொல்லா விடல்.
697
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற  ஒளியோடு ஒழுகப் படும்.
698
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்  துளக்கற்ற காட்சி யவர்.
699
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
700

No comments:

Post a Comment