Thursday, May 24, 2012

en ninaivugalin e -pathivu -tirukkural

துறவறவியல்

அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்  பூரியார் கண்ணும் உள
.
241
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்  தேரினும் அஃதே துணை.
242
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த  இன்னா உலகம் புகல்.
243
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப  தன்னுயிர் அஞ்சும் வினை.
244
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்  மல்லன்மா ஞாலங் கரி.
245
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி  அல்லவை செய்தொழுகு வார்.
246
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு  இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
247
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்  அற்றார்மற் றாதல் அரிது.
248
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்  அருளாதான் செய்யும் அறம்.
249
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்  மெலியார்மேல் செல்லு மிடத்து.
250

புலான்மறுத்தல்



தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்  எங்ஙனம் ஆளும் அருள்?
251
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி  ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
252
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்  உடல்சுவை உண்டார் மனம்.
253
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்  பொருளல்லது அவ்வூன் தினல்.
254
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண  அண்ணாத்தல் செய்யாது அளறு.
255
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
256
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்  புண்ணது உணர்வார்ப் பெறின்.
257
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்  உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
258
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்  உயிர்செகுத் துண்ணாமை நன்று.
259
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி  எல்லா உயிருந் தொழும்.
260

தவம்



உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை  அற்றே தவத்திற் குரு.
261
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை  அஃதிலார் மேற்கொள் வது.
262
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்  மற்றை யவர்கள் தவம்.
263
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்  எண்ணின் தவத்தான் வரும்.
264
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்  ஈண்டு முயலப் படும்.
265
தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்  அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
266
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்  சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
267
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய  மன்னுயி ரெல்லாந் தொழும்.
268
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்  ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
269
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
270

கூடாவொழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்  ஐந்தும் அகத்தே நகும்.
271
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின்.
272
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
273
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து  வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
274
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று  ஏதம் பலவுந் தரும்.
275
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து  வாழ்வாரின் வன்கணார் இல்.
276
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி  மூக்கிற் கரியார் உடைத்து.
277
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
278
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன  வினைபடு பாலால் கொளல்.
279
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
280

கள்ளாமை



எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்  கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
281
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்  கள்ளத்தால் கள்வேம் எனல்.
282
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
283
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்  வீயா விழுமம் தரும்.
284
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்  பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
285
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்  கன்றிய காத லவர்.
286
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்  ஆற்றல் புரிந்தார்கண் இல்.
287
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்  களவறிந்தார் நெஞ்சில் கரவு.
288
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
289
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்  தள்ளாது புத்தே ளுளகு.
290

வாய்மை



வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்  தீமை இலாத சொலல்.
291
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த  நன்மை பயக்கும் எனின்.
292
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்  தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
293
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்  உள்ளத்து ளெல்லாம் உளன்.
294
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு  தானஞ்செய் வாரின் தலை.
295
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை  எல்லா அறமுந் தரும்.
296
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற  செய்யாமை செய்யாமை நன்று.
297
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை  வாய்மையால் காணப் படும்.
298
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்  பொய்யா விளக்கே விளக்கு.
299
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்  வாய்மையின் நல்ல பிற.
300

வெகுளாமை



செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்  காக்கின்என் காவாக்கால் என்?
301
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்  இல்அதனின் தீய பிற.
302
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
303
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்  பகையும் உளவோ பிற.
304
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்  தன்னையே கொல்லுஞ் சினம்.
305
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்  ஏமப் புணையைச் சுடும்.
306
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு  நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
307
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
308
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்  உள்ளான் வெகுளி எனின்.
309
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
310

இன்னாசெய்யாமை



சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா  செய்யாமை மாசற்றார் கோள்.
311
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா  செய்யாமை மாசற்றார் கோள்.
312
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்  உய்யா விழுமந் தரும்.
313
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
314
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்  தந்நோய்போல் போற்றாக் கடை.
315
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை  வேண்டும் பிறன்கண் செயல்.
316
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்  மாணாசெய் யாமை தலை.
317
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ  மன்னுயிர்க்கு இன்னா செயல்.
318
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா  பிற்பகல் தாமே வரும்.
319
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்  நோயின்மை வேண்டு பவர்.
320

கொல்லாமை



அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்  பிறவினை எல்லாந் தரும்.
321
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
322
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
323
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்  கொல்லாமை சூழும் நெறி.
324
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்  கொல்லாமை சூழ்வான் தலை.
325
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்  செல்லாது உயிருண்ணுங் கூற்று.
326
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது  இன்னுயிர் நீக்கும் வினை.
327
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்  கொன்றாகும் ஆக்கங் கடை.
328
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்  புன்மை தெரிவா ரகத்து.
329
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்  செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
330

நிலையாமை



நில்லாத வற்றை நிலையின என்றுணரும்  புல்லறி வாண்மை கடை.
331
கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்  போக்கும் அதுவிளிந் தற்று.
332
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்  அற்குப ஆங்கே செயல்.
333
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
334
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை  மேற்சென்று செய்யப் படும்
335
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்  பெருமை உடைத்துஇவ் வுலகு.
336
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
337
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
338
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
339
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்  துச்சில் இருந்த உயிர்க்கு.
340

துறவு



யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
341
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
342
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்  வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
343
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை  மயலாகும் மற்றும் பெயர்த்து.
344
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்  உற்றார்க்கு உடம்பும் மிகை.
345
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு  உயர்ந்த உலகம் புகும்.
346
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர் க்கு.
347
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
348
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
349
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்  பற்றுக பற்று விடற்கு.
350

மெய்யுணர்தல்



பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்  மருளானாம் மாணாப் பிறப்பு.
351
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
352
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்  வானம் நணிய துடைத்து.
353
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
354
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்  மெய்ப்பொருள் காண்பது அறிவு.
355
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்  மற்றீண்டு வாரா நெறி.
356
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
357
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்  செம்பொருள் காண்பது அறிவு.
358
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்  சார்தரா சார்தரு நோய்.
359
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
360

அவாவறுத்தல்



அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்  தவாஅப் பிறப்பீனும் வித்து.
361
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது  வேண்டாமை வேண்ட வரும்.
362
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை  ஆண்டும் அஃதொப்பது இல்
.
363
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
364
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்  அற்றாக அற்றது இலர்.
365
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
366
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை  தான்வேண்டு மாற்றான் வரும்.
367
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்  தவாஅது மேன்மேல் வரும்.
368
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்  துன்பத்துள் துன்பங் கெடின்.
369
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
370
துறவறவியல் முற்றிற்று.

ஊழியல்



ஊழ்



ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்  போகூழால் தோன்றும் மடி.
371
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
372
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
373
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
374
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
375
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
376
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
377
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
378
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்  அல்லற் படுவ தெவன்?
379
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
380
ஊழியல் முற்றிற்று
அறத்துப்பால் முற்றிற்று

 

பொருட்பால்



அரசியல்



இறைமாட்சி

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
381
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்  எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
382
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்  நீங்கா நிலனாள் பவர்க்கு.
383
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா  மானம் உடைய தரசு.
384
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
385
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்  மீக்கூறும் மன்னன் நிலம்
386
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்  தான்கண் டனைத்திவ் வுலகு.
387
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு  இறையென்று வைக்கப் படும்.
388
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்  கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
389
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்  உடையானாம் வேந்தர்க் கொளி.
390

கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
391
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்  கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
392
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு  புண்ணுடையர் கல்லா தவர்.
393
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
394
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்  கடையரே கல்லா தவர்.
395
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்  கற்றனைத் தூறும் அறிவு.
396
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்  சாந்துணையுங் கல்லாத வாறு.
397
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு  எழுமையும் ஏமாப் புடைத்து.
398
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
399
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு  மாடல்ல மற்றை யவை.
400

கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
401
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்  இல்லாதாள் பெண்காமுற் றற்று.
402
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
403
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
404
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
405
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்  களரனையர் கல்லா தவர்.
406
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்  மண்மாண் புனைபாவை யற்று.
407
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே  கல்லார்கண் பட் ட திரு.
408
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்  கற்றார் அனைத்திலர் பாடு.
409
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்  கற்றாரோடு ஏனை யவர்.
410

கேள்வி



செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்  செல்வத்து ளெல்லாந் தலை.
411
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
412
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்  ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
413
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
414
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே  ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
415
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்  ஆன்ற பெருமை தரும்.
416
பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்  தீண்டிய கேள்வி யவர்.
417
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்  தோட்கப் படாத செவி.
418
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
419
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்  அவியினும் வாழினும் என்?
420

அறிவுடைமை

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்  உள்ளழிக்க லாகா அரண்.
421
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
422
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்  மெய்ப்பொருள் காண்ப தறிவு.
423
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்  நுண்பொருள் காண்ப தறிவு.
424
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.
425
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
426
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
427
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
428
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
429
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்  என்னுடைய ரேனும் இலர்.
430

குற்றங்கடிதல்



செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்  பெருக்கம் பெருமித நீர்த்து.
431
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
432
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்  கொள்வர் பழிநாணு வார்.
433
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
434
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்  வைத்தூறு போலக் கெடும்.
435
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்  என்குற்ற மாகும் இறைக்கு?
436
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
437
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்  எண்ணப் படுவதொன் றன்று.
438
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க  நன்றி பயவா வினை.
439
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
440

பெரியாரைத் துணைக்கோடல்



அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை  திறனறிந்து தேர்ந்து கொளல்.
441
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்  பெற்றியார்ப் பேணிக் கொளல்.
442
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்  பேணித் தமராக் கொளல்.
443
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
444
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்  சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
445
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்  செற்றார் செயக்கிடந்த தில்.
446
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
447
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
448
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்  சார்பிலார்க் கில்லை நிலை.
449
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே  நல்லார் தொடர்கை விடல்.
450

சிற்றினஞ்சேராமை



சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
451
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு  இனத்தியல்ப தாகும் அறிவு.
452
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்  இன்னான் எனப்படுஞ் சொல்.
453
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
454
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்  இனந்தூய்மை தூவா வரும்.
455
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு  இல்லைநன் றாகா வினை.
456
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
457
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு  இனநலம் ஏமாப் புடைத்து.
458
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
459
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்  அல்லற் படுப்பதூஉம் இல்.
460

தெரிந்துசெயல்வகை



அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்  ஊதியமும் சூழ்ந்து செயல்.
461
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு  அரும்பொருள் யாதொன்றும் இல்
462
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
463
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்  ஏதப்பாடு அஞ்சு பவர்.
464
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
465
செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
466
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
467
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
468
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
469
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு  கொள்ளாத கொள்ளாது உலகு.
470

வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்  துணைவலியும் தூக்கிச் செயல்.
471
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
472
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி  இடைக்கண் முரிந்தார் பலர்.
473
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை  வியந்தான் விரைந்து கெடும்.
474
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
475
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
476
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
477
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
478
அளவற஧ந்து வாழாதான் வாழ்க்கை உளபோல  இல்லாகித் தோன்றாக் கெடும்
.
479
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
480

காலமறிதல்



பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்  வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
481
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
482
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.
483
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
484
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
485
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
486
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து  உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
487
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
488
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே  செய்தற் கரிய செயல்.
489
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
490

இடனறிதல்



தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்  இடங்கண்ட பின்அல் லது.
491
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்  ஆக்கம் பலவுந் தரும்.
492
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
493
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து  துன்னியார் துன்னிச் செயின்
.
494
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்  நீங்கின் அதனைப் பிற.
495
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்  நாவாயும் ஓடா நிலத்து.
496
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை  எண்ணி இடத்தால் செயின்.
497
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்  ஊக்கம் அழிந்து விடும்.
498
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்  உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
499
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
500

No comments:

Post a Comment