Monday, December 13, 2021

Enninaivugalin e pathivu

 கண்ணதாசனும்

ஆங்கில புலமையும்,,,


சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர் திரு.வி.பி.ராமன் என்ற வழக்கறிஞர். மிகச் சிறந்த திறமைசாலி. தன்னுடைய சில வழக்குகள் விஷயமாக அவரை சந்திக்க செல்வார் கவியரசு கண்ணதாசன். வழக்கறிஞரின் மனைவி நன்கு படித்தவர். 


ஆங்கில அறிவு உள்ளவர். ஒரு முறை கவிஞர் வழக்கறிஞரைச் சந்திக்க சென்ற போது கதவு மூடியிருந்தது. யாரோ வெளியில் நிற்பதறிந்து


 "ஹூ இஸ் தட்" (Who is that)

 என்று ஆங்கிலத்தில் கேட்டார் வக்கீலின் மனைவி .


"ஆன் அவுட் ஸ்டாண்டிங் பொயட் இஸ் ஸ்டாண்டிங் அவுட் (An outstanding poet is Standing Out) 


என்று பதில் கொடுத்தார் கவிஞர் கண்ணதாசன். 


வெளியில் வந்த வக்கீல் மனைவி "பரவாயில்லையே, தமிழில் தான் கவிதை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். ஆங்கிலத்திலும் புலமை உள்ளதே" என்று வியந்தார். 


அப்போது அவர் தான் படித்த ஆங்கில கவிதையின் இரண்டு வரிகள் தன்னை மிகவும் கவர்ந்ததாக கவியரசரிடம் அதை கூறினார். 


அந்தக் கவிதையில், போரிலிருந்து திரும்பிய ராணு வீரன் போர்க்களத்தையே நினைத்து தூங்காமல் அங்கு மிங்கும் நடந்து கொண்டிருந்தான். 


தன் கணவனை படுக்கக் சொல்லிவிட்டு இந்த வரிகளைக் கூறினாராம் ராணுவ வீரனின் மனைவி .


"ஸ்லீப் யுவர் ஐஸ்....ரெஸ்ட் யுவர்ஹார்ட்" 

(Sleep your eyes , Rest your heart)


என்பதே அந்த வரிகள்.கவிஞரின் மனதில் அந்த வரிகள் மிக ஆழமாகப் பதிந்தது. அந்த நேரத்தில் ஒரு படத்திற்கு பாடல் ஒன்று எழுத வேண்டி வந்தது.


அவரது மனதில் பதிந்த அந்த வரிகள் அன்றைய படத்தின் சூழலுக்கு தக்கவாறு இருந்ததால் அப்படியே பாடலாக வெளிப்பட்டன.


தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும

No comments:

Post a Comment