Monday, March 19, 2012

en ninaivugalin e-pathivu privacy-fun only fun

1.ஒரு நேர்முகத் தேர்வு. '''ஈஸியா 10 கேள்விகள். கஷ்டமா ஒரே ஒரு கேள்வி. எது உங்க சாய்ஸ்?' என்று அதிகாரி கேட்க, இரண்டாவது வாய்ப்பை டிக் அடித்தார் மாணவர். 'கோழியில் இருந்து முட்டைவந் ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?' இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட ஒரே கஷ்டமான கேள்வி. அதற்கு மாணவர் சொன்ன பதில், 'முட்டையில் இருந்துதான் கோழிவந் தது.' உடனே அதிகாரி, 'அது எப்படிச் சொல் றீங்க? கோழி இல்லாம எப்படி முட்டை வரும்?' என்று கேட்க, அதற்கு அந்த மாணவர் பதில் சொன்னவுடன் செலக்ட் செய்யப்பட்டார். அவரது பதில் என்னவாக இருந்திருக்கக் கூடும்?

2.'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?

3.அது ஒரு பிரமாண்ட பாலம். ஆனால், 25 ஆயிரம் கிலோவுக்கு மேல் ஒரு கிராம்கூட அதிகப் பாரத்தைத் தாங்காது. மிகச் சரியாக 25 ஆயிரம் கிலோ எடையுள்ள ஒரு சரக்கு லாரி வேகமாக பாலத்தின் மையப்பகுதியில் போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு சிறிய பறவை பறந்துவந்து லாரியில் அமர்கிறது. பறவையின் எடை 25 கிராம். ஆனால், பாலம் உடையவில்லை. எப்படி?

4.ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கு ஒன்று எனச் சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. ஆனாலும், கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?

5.அது ஒரு ராயல் கேஸினோ கிளப். உள்ளே கோடிகளில்தான் சூதாட்டம் நடக்கும். அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாஸ்வேர்டு உண்டு. அதைச் சொன்னால்தான், உள்ளேயே விடுவார்கள். அதற்குள் போக ஆசைப்படுகிறார் ஹீரோ. ஆனால், அவரிடம் பாஸ்வேர்டு இல்லை. கேஸினோவின் வாசலில் ஒளிந்திருந்து கவனிக்கிறார். அப்போது ஒரு நபர் வருகிறார். அவரிடம் வாட்ச்மேன், '12' என்கிறார். உடனே வந்தவர், '6' என்று திரும்பச் சொல்ல, உள்ளே போக அவருக்கு அனுமதி கிடைக்கிறது. அதேபோல அடுத்து வந்தவரிடம் வாட்ச்மேன், '6' என்றதும், வந்தவர் '3' என்கிறார். அவரும் உள்ளே போய்விடுகிறார். இதை ஒளிந்திருந்து கவனித்த ஹீரோ, 'இவ்ளோதானா மேட்டர்?' என்று ஸ்டைலாக வாட்ச்மேன் முன்னால் போய் நிற்கிறார். அவர், '20' என்கிறார். நம்ம ஹீரோ, '10' என்கிறார் பெருமையாக. ஹீரோவுக்குத் தர்ம அடி விழுகிறது. ஏன், என்ன தப்பு?

No comments:

Post a Comment