Wednesday, January 20, 2016

enninaivugalin e pathivu--உங்கள் வாழ்வு வளம் பெற

உங்கள்  வாழ்வு  வளம் பெற

1.நானே  பெரியவன்  நானே சிறந்தவன்  என்ற அகந்தையை விடுங்கள் .

2.அர்த்தம் இல்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

3.எந்த விஷயத்தையும் பிரட்சனைகளையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக் கொடுங்கள் .

4.சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக  வேண்டும் என உணருங்கள்.

5.நீங்கள்  சொன்னதே  சரி  செய்ததே சரி என வாதாடாதீர்கள் .குறுகிய மனப் பான்மையை  விட்டொழியுங்கள் ..

6. உண்மை எது பொய் எது என்று  விசாரிக்காமல் இங்கே  கேட்டதை அங்கே ,அங்கே கேட்டதை இங்கே  சொல்வதை விடுங்கள் ..

7.மற்றவர்களை விட உங்களை எப்பொழுதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்

8.தேவைக்கு  அதிகமாய்  ஆசை படாதீர்கள் .

9.கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

10.உங்கள் கருத்துக்களில்  உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் .

11. மற்றவர் கருத்துக் களை  செயல்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் .

12.எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம்  உண்டோ  இல்லையோ சொல்லிக் கொண்டு இருக்காதிர்கள் .

13.மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இதமாக  இனிய சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

14.அவ்வபோது  நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள் .

15. பிரட்சனை எற்படும் போது அடுத்தவர் இறங்கி  வர வேண்டும்  என காத்திருக்காமல் நீங்களே  பேச்சை துவக்க முன் வாருங்கள்.

No comments:

Post a Comment