Sunday, January 17, 2016

enninaivugalin e pathivu. kavithai about SBDC

ஒரு நீர் குமிழி உடைவதை  விட
குறைந்த  நேரத்திலேயே
மனதை   சிதைப்பவரிடையே,
இயந்திர  கதியில்  வாழ்வோரை
இயல்பு   கதிக்கு  கொண்டு  வந்து


தாய்,  தந்தையாக , நாங்கள்  இருக்கிறோம் ,
வயது   முதிர்ந்தோரே  வாருங்கள்
பிள்ளைகளாக    நாங்கள்   இருக்கிறோம் ,.
என    இறுமாப்போடு   கூறுவது    மட்டுமன்றி
ஈடுபாடோடு      செயல்படும்


நீங்கள்        வாழ்க    வளமுடன் ............


நாற்பது  வரையிலே  ஒலியெழுப்பும்  வீணைகள்
நாற்பதுக்கு   மேலே தான்  எதிரொலியை
கேட்கத் தொடங்குகின்றன....
இதுவரை  எதிரொலியை  அலட்சியப்  படுத்தக் கூடிய
இரத்தம் இருந்தது .......இப்போது  இரத்தத்தை விட எதிரொலி
சக்தி வாய்ந்ததாக    காட்சியளிக்கும் ..
எதிரொலியை  எதிர்கொள்ள  தடுமாறும் .....


இத் தருணத்தில்  நாங்கள்  இருக்கிறோம் ..
வாருங்கள்  கூடி செயல் படுவோம்,மகிழ்வோம் , ...என அழைக்கும்


 நீங்கள்        வாழ்க    வளமுடன் .......


இந்த  வாய்ப்பை  ஏற்படுத்திய
இறைவனுக்கு  நன்றி   நன்றி    நன்றி ...

நாங்கள்   இன்புற
 நீங்கள்        வாழ்க    வளமுடன் .......



                                                                                                           வே.முத்துலஷ்மி ..  








No comments:

Post a Comment