Wednesday, August 28, 2019

enninaivugalin e pathivu-----thirumanthiram

திருமந்திரம் :
                                 கல்லாதவர்களுக்கு  அறிவையும் , கற்றவர்களுக்கு  தெளிவையும்  கொடுக்கும்  கருத்துக்  கருவூலம்  திருமந்திரம்.

ஆழமான   கருத்துக்களை  எளிய  நடையில்  சொல்லும்  தமிழ்  சாஸ்திர  நூல் . தமிழில்  தோன்றிய  முதல்  யோக  நூல் . ஒன்பது  தந்திரங்கள்  கொண்டது.

முதல்  நான்கு  தந்திரங்கள்  அறம் , பொருள், இன்பம் ,வீடு  ஆகும்.
 ஐந்து  முதல்  ஒன்பது வரை உள்ள தந்திரங்கள்  வீடு பேறு ஆகும் .

 திருமூலர் மாலையெனுந் தெப்பத்தைப் பற்றிக்
கருவேலை யைக்கடப்போங் காண்.
      -சித்தாந்த தரிசனம்.
: திருமூலர் வரலாற்றைச் சொல்லப் புகுந்த தெய்வச்சேக்கிழார்,

‘தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின் மிசைத்திருமூலர் திருவாக்கால் தமிழ்வகுப்ப’

என்று கூறியதன் மூலம் இறைவன் வடமொழியில் அருளிச்செய்த ஆகமங்களின் பொருளை தமிழில் தரவே, திருமூலரைத் திருவருள் தந்தது என்று விளக்குகிறார். திருமூலரும் இதனையே,

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

என்று குறிப்பிடுகின்றார்.


"ஊனுடம்பிற் பிறவி விடந் தீர்த்துலகத் தோர்உய்ய

ஞான முதல் நான்குமலர் நல்திருமந் திரமாலை" (பா - 26)

என்பது சேக்கிழார் வாக்கு

சுந்தரமூர்த்தி நாயனார் "நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்" என்று குறிப்பிடுகின்றார். 

தேவர் குறளும்  திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனி மொழியும் --கோவை 
 திருவாசகமும்  திருமூலர் சொல்லும்  ஒரு வாசகம்  என்று  உணர்.
என்னும்  ஒளவையார்  அருளிய நல்வழிச்  செய்யுளே சான்றாம் .

பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையென்றும், மூவாயிரம் திருப்பாட்டுகள் கொண்ட முதுமொழியென்றும், தந்திரம் - மந்திரம் - உபதேசம் என்ற முக்கூறுகள் கொண்ட முதனூலென்றும் அறியப்பெறும் திருமந்திரம் வேதப்பொருளன்று; ஆகமப்பொருள். ஓதப்படுவது வேதம்; ஒழுங்குசெய்வது ஆகமம்.


ஆகமங்களின் பெயரையும், அவற்றின் தொகையையும், அவற்றைத் தாம் பெற்ற முறைமையையும், அவற்றில் கூறப்படும் பொருளையும் திருமூலநாயனார் குறிப்பாயும் வெளிப்படையாயும் உணர்த்துகின்றார்.

காமிகம் போன்ற ஆகமங்களில் ஆகமங்களின் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சுதாசிவ பரமேஸ்வர மூர்த்தியின் ஈசான முகத்திலிருந்து பிரணவர் முதலிய சிவாம்சமுள்ள முப்பதின்மர் கேட்டறிந்தவை பத்து ஆகமங்கள் என்றும் ருத்திராம்சமுள்ள அநாதிருத்திரர் முதலிய முப்பத்தறுவர் கேட்டது பதினெட்டு ஆகமங்கள் என்றும் இவ்வரலாறுகளில் குறிப்பிடப்படுகின்றது.

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றி செய்து
ஆந்தி மதிபுனை அரன்அடி நாடொறும்
சிந்தைசெய்து ஆகமஞ் செப்பலுற் றேனே’  (2)

என்றும்,

‘நவவாகமம் எங்கள் நந்தி பெற்றானே’ (3)

என்றும்,

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தும் வாதுளம்
மற்றவ் (வி)யாமளம் ஆகுங் காலோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே’ (5)

ஆகமங்கள்  இருபத்தெட்டு .முக்கியமானவை  ஒன்பது .

.காரணம், காமிகம்,வீரம் ,சிந்தியம் ,வாதுளம் ,யாமளம் ,காலோத்தரம் ,சுப்பிரம் ,மகுடம்  ஆகிய  இவ் வொன்பத்தின்  சாரமே  திருமந்திரம்.


திருமூலர் இறை அனுபவம் முற்றிலும் பெற்ற ஓர் ஒப்பற்ற யோகியாவார். இறவைனைப் புறத்திலும் அகத்திலும் வழிபட்டு, தனது யோகத்தின் வலிமையாலும், தவத்தின் சாதனையாலும் எங்கும், எவ்வுலகிலும் காணப்படும் பரம்பொருளைத் தம்முள் கண்டவராய் இறை அனுபவம் நிறைந்தவராகத் திகழ்கிறார். திருவருள் அவருக்கு இட்ட பணி. மக்களிடையே சைவத்தையும், ஆன்மீகத்தையும் பரப்புவதாகும். 

இதற்காகவே பூவுலகில் எண்ணற்ற ஆண்டுகள் திருமூலர் வாழ்ந்திருந்தார்.

"செப்புஞ் சிவாகமம் என்னும் அப் பேர்பெற்றும்

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில் எழுகோடி யுகம் இருந் தேனே".

இறைவனுடன் இரண்டறக் கலந்த உயிரின் இருப்பிடம் திருவருளேயாகும். அதற்கு இரவு பகல், இறப்பு பிறப்பு என்பது இல்லை. அத்தகைய உயிரின் நிலை உடலைச் சார்ந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்டதாகும்.
திருமூலருடைய சுயானுபவம், சிவானுபவம் மேலும் வெளிவருகிறது.

"நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்

நந்திஅரு ளாலே சதாசிவ னாயினேன்

நந்திஅரு ளாலே மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாலே நானிருந் தேனே".

இந்த மந்திரத்தின் உட்கருத்து, மூலன் என்று பெயர் பெற்ற சிவயோகியார் நிண்ட காலம் இறைவனை நாடித் தீவிர யோக நிலையில் நின்றார். தன்னுள் இருக்கும் மூலாதாரச் சக்தியினைக் கட்டுப்படுத்தி மேற்செலுத்தி, சாதாரண வாழ்க்கையின்அடிப்படைப் பற்றுக்களை நீக்கி, இறைவன் அருளால் ஞான விளக்கம் பெற்று, நானென்றும், தானென்றும் காணப்படும் வேற்றுமையை ஒழித்துச் சிவசக்தியுடன் இரண்டறக் கலந்தார் என்பதேயாகும்.

கருணை நிரம்பிய உள்ளங்கள் உடையவர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள். அவைகள் இறைவனுடைய இருப்பிடங்கள். திருவருள் முழுமையாக அவர்களுடைய உள்ளத்தில் பதிந்து, அவர்களை வழிநடத்திச் செல்கிறது. 

இதுவே களிம்பறுத்தல் எனப்படும்.

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுருக்கியா ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே".

உயிரின் சாதனைக்கு உடம்பு இன்றியமையாதது. உயிரை வளர்க்க உடம்பைப் பேணவேண்டும். . எனவே, சித்தர்கள் உடம்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே". 

என்று  அருளினார் .

சித்தர்கள் போதிப்பது சித்தாந்தம். அத்துடன் சிவத்தையும் சேர்த்துக் கொண்டால் நமக்குக் கிடைப்பது. சைவசித்தாந்தம். அதாவது சித்தர்கள் சிவமெனும் பரம்பொருளைஅனுபவித்துத் தங்கள் உணர்வினை வெளியிடுகிறார்கள். இருவினைக்கு அப்பால் நிற்கும் இறைவனை, பேரின்ப நிலையை, அன்பின் வடிவை, படைத்தால், காத்தல், அழித்தல், அருளல் போன்ற தொழில்களையெல்லாம் புரியும் தேவர்களுக்கு அப்பாற்பட்ட ஓர் உண்மையை, இப்பிரபஞ்சத்திற்கு ஆதாரமாய், பிரபஞ்சமாய், எல்லாவற்றிற்கும் காரணமாய், எல்லாவுமாய் விளங்குகின்ற ஒருவனை, மனத்திற்குள் உணர்ந்து, அவனுடைய தன்மையை விளக்கி, அவனை அடையும் வழிகளை உலகிற்கு எடுத்துக்காட்டுவதே சைவ சித்தாந்தமாகும்.

Wednesday, May 15, 2019

Enninaivugalinepathivu...kavithai about vasuki

இப்படியும் ஒரு மனைவி இருந்திருக்கிறாளா..?

பல நூறு ஆண்டுகளுக்கு முன்...ஒரு புலவரின் மனைவி... இறக்கும் தருவாயில் தன் கணவனை அருகே அழைத்தாளாம் ...

என்னவென்று கேட்டு கலங்கிய கண்களோடு கணவன் அவள் பக்கத்தில் வர...மனைவி தயக்கத்துடன் இப்படிக் கேட்டாளாம் ...

“என் உயிர் எப்போதோ என்னை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும்..ஆனால்..ஒரே ஒரு கேள்வி ..
என் நெஞ்சுக் குழியில் நின்று கொண்டு,என் உயிர் இந்த உடலை விட்டுப் பிரியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.. அந்தக் கேள்வியை இதுவரை உங்களிடம் நான் கேட்டதில்லை...இப்போதாவது கேட்கலாமா..?”

புலவனான அந்தக் கணவன் , புரியாமல் அந்தப் புனிதவதியைப் பார்க்க...அந்த மனைவி கேட்டாளாம் இப்படி:

“இதுவரை உங்களிடம் நான் கேட்காத அந்தக் கேள்விக்கு , இப்போதாவது பதில் எனக்குத் தெரிந்து விட்டால்...நிம்மதியாக கண்களை மூடுவேன்.. அந்த நிம்மதியான மரணத்தை எனக்குத் தருவீர்களா.?”

கணவன் மௌனமாக தலையசைத்து சம்மதம் தெரிவிக்க மனைவி தன் நெடுநாள் சந்தேகத்தை கேட்டு விட்டாளாம்..

“ஒவ்வொரு நாளும் நீங்கள் உணவு அருந்தும்போது ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் கொண்டு வரச் சொல்லி , அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவீர்கள்...அப்படித்தானே..?”
கணவன் இதற்கும் மௌனமாக தலையசைக்க , மனைவி கேட்டாளாம் ..”இதுவரை அதற்கான காரணத்தை ஒருபோதும் நான் உங்களிடம் கேட்டதில்லை... காரணம்..கணவன் சொன்னதற்கு மறுபேச்சு பேசி , நான் அறிந்ததில்லை... இப்போது என் வாழ்வின் இறுதி மூச்சில் இருக்கிறேன்...இப்போதாவது சொல்லுங்கள்.. அந்த கொட்டங்கச்சியும் , தண்ணீரும் எதற்காக..?”

இதைக் கேட்டுவிட்டு , இதற்கான பதிலை எதிர்பார்த்து அந்த மனைவி , புலவனான கணவன் முகத்தைப் புரியாமல் பார்த்திருக்க அந்தக் கணவன் சொன்னாராம்.. “ அது வேறொன்றும் இல்லை... பரிமாறும்போது தவறுதலாக சோற்றுப்பருக்கை கீழே சிந்தி விட்டால்,அதை அந்த ஊசியில் குத்தி,கொட்டாங்குச்சியில் உள்ள தண்ணீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணத்தான் அந்தக் கொட்டங்கச்சி நீரும்..ஊசியும்..”

கணவன் பதில் சொல்லியும் மனைவியின் குழப்பம் தீரவில்லை...அவள் கேட்டாள் .. “ஆனால் ஒருபோதும் நீங்கள் அந்த ஊசியையும் , கொட்டாங்கச்சியையும் பயன்படுத்தி நான் பார்த்ததே இல்லையே..?”

மனைவி இப்படிக் கேட்டதும்...குரல் உடைந்து போன கணவன்...குமுறும் அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாராம்... “ உண்மைதான்...ஒரு நாளும் நான் அதைப் பயன்படுத்தவில்லை..!

ஏனென்றால் ஒரு நாளும் நீ எனக்குப் பரிமாறும்போது , ஒரு சோற்றுப் பருக்கையைக் கூட சிந்தவே இல்லையே....!”

கணவன் பதில் அறிந்த மனைவி.. புன்னகை செய்தாளாம்.... அவ்வளவுதான்...! கண் மூடி விட்டாளாம்..!!

நெகிழ்ச்சியோடு நெடு நேரம் நின்ற கணவன் ..அந்தப் புலவன்...கண்ணீரோடு தன் அன்பு மனைவிக்காக உடனே ஒரு கவிதை எழுதினானாம் ...

இதுநாள் வரை தன் வாழ்நாளில் அவன் எழுதியதெல்லாம் ...இரண்டு வரிப் பாடல்கள்...அதில் ஏழே ஏழு வார்த்தைகள்..! அவ்வளவுதான்...அதுதான் அந்தப் புலவன் தன் பாட்டுக்கு ஏற்படுத்திக் கொண்ட பார்முலா..விதி..!

இப்போது.... தனது செய்யுள் விதியை...தானே தளர்த்திக் கொண்ட அந்தப் புலவன்... தன் வாழ்வில் முதன் முதலாக , நாலு வரிப் பாட்டு ஒன்றை எழுதினானாம்...அந்த நாலு வரிப் பாடல்:

“அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு”

#ஆம்... இந்த நாலு வரிப் பாடலை எழுதிய அந்தப் புலவர் ..திருவள்ளுவர்....!

கணவன் சொல் தட்டாத அந்த கள்ளமற்ற அன்பு மனைவி ..வாசுகி...!

அந்தப் பாடலின் பொருள் :

“அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!”

இன்னொரு வள்ளுவன் எதிர்காலத்தில் பிறக்கலாம்...!
ஆனால்..இன்னொரு வாசுகி எதிர்காலத்தில் பிறக்க முடியுமா ...

Wednesday, January 16, 2019

Enninaivugalin e pathivu....maths

சில வித்தியாசமான கணக்குகள்....

கூட்டல்:
மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி
மனிதன்+கவலை = கண்ணீர்
மனிதன்+ஆனந்தம் = புன்னகை
மனிதன்+இயலாமை = கோபம்
மனிதன்+அன்பு = காதல்
மனிதன்+ஆசை=காமம்

கழித்தல்:

மனிதன் - தன்னம்பிக்கை= தோல்வி
மனிதன் - கவலை = உற்சாகம்
மனிதன் - ஆனந்தம் = சோம்பல்
மனிதன் - இயலாமை = முயற்சி
மனிதன் - அன்பு = குரோதம்
மனிதன் - ஆசை = அமைதி

பெருக்கல்:

மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை
மனிதன் × கவலை = தற்கொலை
மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி
மனிதன் × இயலாமை = அவதி
மனிதன் × அன்பு = மனிதாபிமானம்
மனிதன் × ஆசை = வக்கிரம்

நன்றி: கவிஞர் பா.விஜய் அவர்களின் வானவில் பூங்கா புத்தகம்.

Sunday, December 16, 2018

Enninaivugalin epathivu.....male female

நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு `ஆண் உணவு' என்று பெயர் ஆயிற்று.  நீரில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு `பெண் உணவு' என்று பெயர் ஆயிற்று. ஆண், அவசரத்தின் அடையாளம் ஆனான். பெண், பக்குவத்தின் அடையாளம் ஆனாள்.

Thursday, December 6, 2018

Enninaivugalin epathivu...pen

#பெண்களைப் பற்றி *#வில்லியம்_கோல்டிங்* என்னும் ஆங்கில
நாவலாசிரியர்
சொல்லுவது இதுதான்:-

“பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று *முட்டாள்தனமாக* எண்ணிக்
கொண்டிருக்கின்றனர்
என்றே நான்
நினைக்கிறேன்…….

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை;

மாறாக,
ஆண்களைவிட
*பன்மடங்கு*
*உயர்ந்தவர்கள்*
பெண்கள்…..

ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை *பெரிதாக்கி* சிறப்பு செய்துவிடுவாள்….

உன் *சக்தியைக்* கொடு, அவள் உனக்கு ஒரு *குழந்தையைத்* தருவாள்….

ஒரு *வீட்டைக்* கொடுத்தால் அதனை அவள் *குடும்பமாக* மாற்றிக்காட்டுவாள்……

நீ *மளிகைப்* பொருட்களைக் கொடுத்தால் அவள் *விருந்து* படைப்பாள்…..

உன் *புன்னகையை* அளித்தால் அவள் தன் *இதயத்தை* உனக்குக் கொடுத்துவிடுவாள்……..

நீ கொடுப்பது எதுவாயினும் அதனை *பலமடங்கு* பெரிதாக்குவது பெண்ணின் குணம்….

எனவே நீ அவளுக்கு *சிறிய அளவில் ஏதாவது  தொல்லை* கொடுத்தாயானால் அவள் உடனே அதையே *டன் கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள்* என்பதையும் புரிந்துகொள்…