Monday, July 17, 2017

Enninaivugalin e thathivi---super msg...bird

ஆகாய ஆச்சரியம்.!
🐦
அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.

இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்?

ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?

அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.

பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!

#நம்பிக்கைதென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் கதையொன்றில் 1990களில் இந்திய  தொலைத்தொடர்புத் துறை பொறியாளர் ஒருவர் ஊர் ஊராக சென்று தரைவழி கேபிள்களை பதிப்பதற்கான பணியை  மேற்கொண்டு வந்தபோது அப்பொறியாளருக்கு பெரும் சவாலாக இருந்தது என்னவென்றால் போகும் இடமெல்லாம் கேபிள் போடுவதற்கு  மண்ணை தோண்டி தருவதற்காக ஒரு வேலையாள் நிரந்தரமாக வேண்டுமென்பதே.. அதனால் அப்பொறியாளர் ஒரு முடிவுக்கு வந்தார். வேலைக்கு ஆள்தேவை என்று விளம்பர போர்டு வைப்பது. இதுபற்றி அவர் தனது நண்பனிடம் தெரிவித்தவுடன் அவர் நண்பன், கவலைபடாதே அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாராம். அதை நம்பி அப்பொறியாளரும் இரவு தூங்குவதற்கு சென்றுவிட்டாராம். மறுநாள் பொறியாளர்  கடைத்தெருவிற்கு சென்றபோது அனைவரும் அவரை பார்த்து கிசுகிசுத்தவாறே சிரித்துள்ளனர். இதை கவனித்த பொறியாளர் பிறகு தனது நண்பன் வைத்த விளம்பர போர்டை பார்த்துதான் மக்களின் சிரிப்பிற்கான காரணத்தை தெரிந்துகொண்டாராம்... அப்படி என்னதான் அந்த விளம்பர போர்டில் இருந்தது என்கிறீர்களா...???

"கூடவே இருந்து குழிதோண்ட ஆள்தேவை - இப்படிக்கு தொலைத்தொடர்பு அதிகாரி" 😂😂😂😂
#படித்தது            படிப்பினை நிறைந்த ஒரு சிறுகதை - கட்டாயம் வாசியுங்கள்!
***************************

ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு.
ரொம்ப தூரத்தில இருந்து பறந்துவந்த
குருவி ஒண்ணு,முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து,'ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு
பொறிச்சிக்கிடட்டுமா?'ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.
ஆனா அந்த மரம்,'அதெல்லாம் முடியாது' னு கண்டிஷனா சொல்லிருச்சு.
சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக்குருவி.
இடம்தானே..தாராளமா இருந்துக்கோ' னு பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்.
ஒரே மாசம்தான்...... ஆத்துல வெள்ளம்
பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது.
ஆனா,குருவிக்கு இடம் கொடுத்த 2வது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது.
முதல் ஆலமரத்தைப்பார்த்த குருவி,' அடுத்தவங்களுக்கு உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்'னு
எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது.
ஆனா,வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா.....
'என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும்...நீயும் என்னோட சேர்ந்து சாகவேண்டாம்'னு தான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்...
ஏ குருவியே! நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும்!' என்று நினைத்து வெள்ளத்திலே போய்விட்டது.
அன்பு நண்பரகளை.
இப்படி தான் உண்மையான தியாகிகள் வெளி உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை!"
நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு; நம் மகிழ்ச்சிக்காக நம்மையே தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு!
மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும் பெற்றோர்களும்; மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும்கூட
சீர்செனத்தி செய்யும் பெற்றோர்களும்,
சகோதரர்களும்கூட தியாகிகள் தான்!
சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத் தோன்றினாலும் ,
அது நம் நன்மைக்காகவே இருக்கும்!
ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது!

#படித்ததில்_பிடித்தது!

No comments:

Post a Comment