Thursday, March 15, 2012

en ninaivugalin e-pathivu --joke -march

நீதிபதி: ஏம்பா. இவ்வளவு பெரிய திருட்ட நீ மட்டும் தனியாவா செஞ்ச?
குற்றவாளி: ஆமா ஐயா. இப்ப காலம் கெட்டுக் கிடக்குது. யாரையும் நம்ப முடியல...

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தம்பி இந்த லெட்டரை உங்க அக்காகிட்ட கொடு" "அதுக்கு வேற ஆளை பாரு"
"ஏன்டா, உங்க அக்கா நல்லாத்தானே இருக்கா!"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"எந்த ஐட்டம் கேட்டாலும் இல்லைன்னு சொல்றே, அப்புறம் என்ன எழவுக்கு மெனுகார்டை கொடுத்தே?"
"ஒவ்வொரு ஐட்டத்தோட பேரையும் சொல்லி, இல்லைன்னு சொன்னா எனக்கு வாய் வலிக்குமே சார்."

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"
"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"
"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும்,
அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்! கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ..
மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.
கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே..
மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்...
மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அய்யா, அப்ப எல்லா மனைவிமார்களும் இப்படிதான் போல!

No comments:

Post a Comment